Saturday, November 30, 2019

இந்தியாவில் கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்டு சாதனை

செய்தி - இந்தியாவில் கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்டு சாதனை
இதென்ன பெரிய சாதனை. நம்ம நாட்டில் வாயாலே வடை சுடும் மூன்று தலைவர்கள் இருக்கிறார்களே. அதுவும் பல வருடங்களாக இதை செய்து வருகிறார்களே.
ஒருவர் ஒவ்வொரு தீபாவளிக்கும் தீர்வு வரும் என்று வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்னொருவர் “தீர்வு வரவில்லை என்றால் உடனே ராஜினாமா செய்வேன். இதோ அந்த கடிதம் தயாராக பொக்கற்றில் இருக்கிறது” என்று வடை சுட்டார்.
மற்றவர் பல வருடங்களாக “போராட்டம் வெடிக்கும்” என்று வெறும் வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்.
வாயால் வடை சுட்டால் என்ன கிடைக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவர்கள் வாயால் வடை சுட்டு,
ஒருவர் இரண்டு சொகுசு பங்களா, 6 சொகுசு வாகனம், 32 சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெற்றார்.
இன்னொருவர் ஜனாதிபதி சட்டத்தரணி பதவி மற்றும் எஸ்.ரி.எவ் பொலிஸ் பாதுகாப்பு பெற்றார்.
மற்றவர் மாவிட்டபுரத்தில் பங்களா, கொழும்பில் பங்களா, சென்னையில் பங்களா கட்டினார்.
இதைவிட தேர்தலுக்கு தேர்தல் இந்திய தூதுவரிடமிருந்தும் மற்றும் ஆதரவு கேட்கும் கட்சிகளிடமிருந்தும் கோடிக்கணக்கான ரூபாய்கள் பணத்தையும் பெற்று வருகின்றனர்.
இவர்கள் தங்கள் சுய நலன்களுக்காக தமிழ் மக்களை முட்டாள்கள் என நினைத்திருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் இவர்கள் தமிழ் மக்களை மூளையே இல்லாதவர்கள் என்றல்லவா நினைக்கிறார்கள்.
இப்போது இரண்டு போத்தல்களில் விஷம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். ஒன்று உடனடியாக கொல்லும் தன்மை கொண்டது. மற்றது கொஞ்சம் மெதுவாக கொல்லும் தன்மை கொண்டது. ஆனால் இரண்டும் கொல்லும் தன்மை கொண்டவையே.
இந்த இரண்டில் ஒன்றை குடிக்கும்படி கேட்டால் முட்டாள் உடனடியாக கொல்லும் விஷத்தைக் குடிப்பான்.
மூளையே இல்லாதவன் மெதுவாக கொல்லும் விஷத்தைக் குடிப்பான்.
அதுபோலவே சஜித் பிரேமதாசா மெதுவாக் கொல்லும் விஷம்தான். ஆனால் அதை குடிப்பதே தமிழருக்கு நல்லது என்று இந்த வாயால் வடை சுடும் வீரர்கள் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் தமிழ் மக்கள் மூளையே இல்லாதவர்களா?
குறிப்பு - இவர்களின் அண்மைய சாதனை மாவீரர்களை வணங்கிய எம்மவர்களை சஜித் பிரேமதாசாவை வணங்க வைத்தமையே. (படம் கீழே)

No comments:

Post a Comment