Saturday, November 30, 2019

இவன் பாலஸ்தீன சிறுவன்.

இவன் பாலஸ்தீன சிறுவன்.
இவன் தன் நிலத்தைவிட்டு “வெளியே போ” என்று இஸ்ரவேல் ராணுவத்தை விரட்டுகிறான்.
ஆனால்,
இந்த சிறுவன் “பயங்கரவாதி” என்று கூறப்படவில்லை
இந்த சிறுவனை சுட்டுக் கொன்றுவிட்டு “இவன் அப்பா பயங்கரவாதி எனவே இவனும் பயங்கரவாதி” என்று கூறப்படவில்லை
முக்கியமாக இவன் “குழந்தைப் போராளி” என்று ஜநா வினால் கூறப்படவில்லை.
மாறாக இந்த சிறுவனின் உணர்வு உலகெங்கும் பாராட்டப்படுகிறது.
இதையே கேப்பாப்புலவில் ஒரு தமிழ் சிறுவன் செய்தபோது
“சிறுவர்களை தூண்டி விடுகிறார்கள்”
“லண்டனில் இருந்து உசுப்பேத்தாமல் தைரியம் இருந்தால் நாட்டுக்கு வந்து செய்யுங்கள்”
என்றெல்லாம் நம்மவர்களே சிலர் எழுதினார்கள்.
இந்த “சிலர்” பாலஸ்தீனத்தில் இல்லைபோலும். அதனால்தான் அவர்களால் சாதிக்க முடிகிறது.

No comments:

Post a Comment