Saturday, November 30, 2019

•நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கம் என்ன?

•நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கம் என்ன?
செய்தி - சோனியா காந்தியின் உயிருக்கு புலிகளால் ஆபத்து இருக்கிறது - டி.ஆர். பாலு
2009ல் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று இலங்கை அரசும் அப்போது இருந்த சோனியாவின் இந்திய அரசுமே அறிவித்திருந்தன.
இப்போது புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து என்று அந்த அரசில் அங்கம் வகித்த திமுக வின் பாலு கூறுகிறார்.
இல்லாத புலிகளால் எப்படி சோனியாவின் உயிருக்கு ஆபத்து வரும் என்று பாலுவிடம் கேட்க தோன்றுகிறது.
ஆனால் பாலுவின் இந்த பேச்சில் நாம் மூன்று விடயங்களை கண்டு கொள்ளலாம்.
(1) புலிகள் இயக்கம் இருப்பதாக கூறி மோடி அரசு அண்மையில் 5 ஆண்டுகள் தடை நீடித்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் புலிகளால் ஆபத்து என்று அதே மோடி அரசிடம் பாலு கேட்பது தர்க்கரீதியாக சரியானதே.
(2) முள்ளிவாய்க்கால் அழிவில் சோனியா காந்திக்கும் பங்கு உண்டு என்பதையும் அதனால்தான் ஈழத் தமிழர்களின் கோபம் சோனியா மீது உண்டு என்பதை பாலு தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
(3) புலிகளால் சோனியாவுக்கு ஆபத்து என்று பேசியதன் மூலம் பாலு மட்டுமல்ல அவரது திமுக வும் தமது நலன்களுக்காக தமிழர்களை காட்டிக் கொடுக்க தயங்க மாட்டார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த டி.ஆர்.பாலு கொல்லப்பட்ட தமிழர்களின் ரத்தம் காயுமுன்னர் இலங்கை வந்து மகிந்தவின் கொலைக்கரங்களை பற்றி பரிசில்கள் பெற்றுச் சென்றவர்.
அதுமட்டுமல்ல இலங்கையில் கொழும்பில் ஹோட்டல் பிசினஸ்ல் பல கோடி ரூபா முதலீடு செய்து வருபவர்.
எனவே அவர் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பேசுவது ஆச்சரியம் இல்லை. மாறாக பேசவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
ஆனால் இங்கு நாம் கேட்க விரும்புவது என்னவெனில் திமுக வின் கூட்டணி கட்சிகளான வைகோ, திருமாவளவன், ஆகியோர் இது பற்றி என்ன கூறப் போகிறார்கள்?
இங்கு தமிழ் மக்களாகிய நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் திரும்பி வந்து தமிழீழம் பெற்று தருவார் என்று கூறுவது இப்போது பாலுவுக்கும் சோனியாவுக்கும் உதவியிருக்கிறது என்பதையே.

No comments:

Post a Comment