Saturday, November 30, 2019

தான் கூவித்தான் பொழுது விடிகிறது என்று சேவல் நினைத்தால்

தான் கூவித்தான் பொழுது விடிகிறது என்று சேவல் நினைத்தால் அது எந்தளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது தாங்கள் சொல்லியே தமிழ் மக்கள் சஜித்திற்கு வோட்டு போட்டார்கள் என்று சம்பந்தர் ஐயா கூறுவது.
தமிழ் மக்கள் சஜித்திற்காக வோட்டு போடவில்லை. மாறாக கோத்தபாயா வரக்கூடாது என்பதற்காகவே வோட்டு போட்டிருக்கிறார்கள்.
இம்முறை மட்டுமல்ல கடந்தமுறையும் மகிந்தா வரக்கூடாது என்பதற்காகவே மைத்திரிக்கு வோட்டு போட்டார்கள்.
அதற்கு முதல் முறையும்கூட மகிந்தா வரக்கூடாது என்பதற்காகவே சரத்பொன்சேகாவுக்கு வோட்டுப் போட்டார்கள்.
ஆனால் சம்பந்தர் ஐயாவோ தாங்கள் கூறித்தான் தமிழ் மக்கள் சஜித்திற்கு வோட்டு போட்டதாக பொய் கூறுகிறார்.
பொருத்தமான பொய் கூறுபவன் யோக்கியனாக கருதப்படுகிறான். மன்னிக்கவும் தமிழ் மக்களின் தலைவராக கருதப்படுகிறார்.
கொடுமை இது!

No comments:

Post a Comment