Saturday, November 30, 2019

சட்டம், நீதிமன்றம், பொலிஸ், அமைச்சர் எல்லாம் கூட்டுக் களவானிகளே

•சட்டம், நீதிமன்றம், பொலிஸ், அமைச்சர் எல்லாம் கூட்டுக் களவானிகளே!
“பெல்ட் ஆல் அடிக்காதீங்கண்ணா, வலிக்குது அண்ணா, நானே கழட்டுகிறேன் அண்ணா” என்று பெண் கதறி அழுதாரே, அது பொய்யா?
ஆனாலும் அந்த மிருகங்கள் இரங்கவில்லை. பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அதை படம் பிடித்தும் வைத்தனரே. அது பொய்யா?
பிடித்து வைத்திருந்த படத்தை காட்டி பணம் பறித்துள்ளனர். மிரட்டி வேறு பலருக்கும் அந்த பெண்களை இரையாக்கினார்களே. அது பொய்யா?
இது ஏதோ ஒன்றோ இரண்டு பெண்களுக்கு நடக்கவில்லை. 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நடந்துள்ளதே. அது பொய்யா?
அதுவும் ஏதோ ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்தில் நடந்துவிடவில்லை. மாறாக 2012ல் இருந்து நடந்து வந்ததே. அது பொய்யா?
இந்த கும்பலில் தொகுதி எம்எல்.ஏ வின் மகன் உட்பட 20ற்கு மேற்பட்டவர்கள் உணடு என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினார்களே, அது பொய்யா?
எப்படி கொஞ்சம்கூட மனட்சாட்சி இன்றி “தகுந்த ஆதாரம் இல்லை” என்று இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை நீக்க முடிகிறது?
இனி அடுத்து “ஆதாரம் இல்லை” என்று அவர்களை சிறையில் இருந்தும் விடுதலை செய்யப் போகிறார்கள்.
ஏனெனில் இங்கு பொலிஸ், சட்டம், நீதிமன்றம் எல்லாம் எம்.எல.ஏ யின் கூட்டுக் களவானிகளாகவே செயற்படுகின்றார்கள்.
1980 ல் பருத்தித்துறையில் கமலம் என்ற மாணவி இதே போன்று இருவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் அவர்கள் 1983ல் இனக்கலவர நிலையைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பி வந்துவிட்டார்கள்.
ஆனால் இயக்கம் அந்த முக்கியமான நபரை பிடித்து வல்வெட்டித்துறை சந்தியில் இருந்த மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு சுட்டுக் கொன்றது.
இதேபோன்று தமிழகத்திலும் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து சம்பந்தப்பட்ட பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
இல்லையேல் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கிடைக்காது.

No comments:

Post a Comment