Saturday, November 30, 2019

கோத்தாவும் சஜித்தும் ஒன்னு

கோத்தாவும் சஜித்தும் ஒன்னு
இதை அறியாவர்கள் வாயில் மண்ணு
தேர்தல்பாதை மூலம் தமிழ் மக்கள்
இதுவரை எதையும் பெறவில்லை.
இனியும் எதுவும் பெற்றுவிட முடியாது.
தேர்தல் மூலம் தமிழ் மக்கள் எதுவும் பெற்றுவிட முடியுமென்றால்
அவர்கள் தேர்தலையே தமிழ் மக்களுக்கு அனுமதிக்க மாட்டார்கள்.
மகிந்த காலத்திலும் தமிழ் மக்கள் போராடினார்கள்
மைத்திரி காலத்திலும் தமிழ் மக்கள் போராடுகிறார்கள்
இனி கோத்தாவோ அல்லது சஜித் வந்தாலும்
அவர்கள் காலத்திலும் தமிழ் மக்கள் போராடுவார்கள்.
ஏனெனில் போராட்டம் ஒன்றே வழி
போராட்டத்தை விட்டால் வேறு வழியில்லை.
யார் வந்தாலும் தமிழ் மக்கள் போராடுவார்கள்.
யார் வந்தாலும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் தலைமைகள பதவி பெறுவார்கள். பங்களாக்கள் பெறுவார்கள்.

No comments:

Post a Comment