Saturday, November 30, 2019

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

•வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.
அந்த ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்!
இதுவரை சி.ஜ.டி அதிகாரிகளுக்கு பயந்து தமிழ் இளைஞர்கள் சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரினார்கள்.
ஆனால் இப்போது அந்த சி.ஜ.டி அதிகாரியே பயந்து சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
குற்ற விசாரணைத் திணைக்களத்தின் உயர் அதிகாரியான நிஷாந்த சில்வா என்பவரே தன் குடும்பத்துடன் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
அவர் வசந்த விக்கிரமதுங்க, வாசீம் தாஜீடீன், கீத் நோயார், எக்னெலிகொட வழக்கு விசாரணை விபரங்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.
இவ் விபரங்கள் வெளியில் வந்தால் மகிந்த குடும்பத்திற்கு ஆபத்து என்பதை உணர்ந்த இலங்கை அரசு அவரை திருப்பி ஒப்படைக்கும்படி சுவிஸ் அரசிடம் கோரியுள்ளது.
ஆனால் சுவிஸ் அரசு அவரை திருப்பி ஒப்படைக்க மறுத்ததுடன் அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கவும் முடிவு செய்திருப்பதாக அறிய வருகிறது.
இதன்மூலம் தமிழ் மக்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நிஷாந்த சில்வாவிடம் இருக்கும் ஆவணங்களை மனிதவுரிமைக் கமிஷனில் சமர்ப்பிக்க தமிழ் அமைப்புகள் வழி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment