Saturday, November 30, 2019

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்.

•“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்.
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
செய்தி - மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக லண்டனில் ஒலித்த புலம்பெயர்ந்த தமிழர்களின் குரல்.
2009 முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின்னர் உலகத் தமிழர் மத்தியில் ஒரு நல்ல மாற்றம் நடந்து வருகிறது.
அது என்னவெனில் உலகில் எந்த மூலையில் ஒரு தமிழனுக்கு அநீதி நடந்தாலும் அதற்கு எதிராக உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
அதன்படி, புலிகளை மீள் கட்ட முயற்சி செய்கிறார்கள் என்ற பொய் குற்றச்சாட்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யுமாறு லண்டன் வாழ் தமிழர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் லண்டனில் மலேசிய தூதராலயம் முன் உணர்வுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி இவ்வாறு குரல் கொடுத்துள்ளார்கள்.
மலேசிய அரசு உடனடியாக கைது செய்த தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் லண்டன் போன்று உலகில் உள்ள அனைத்து மலேசிய தூதராலயங்களும் தமிழர்களால் முற்றுகை செய்யப்படும்.
குறிப்பு - நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஒடும். ஆனால் அதே கல்லை தேன் கூட்டுக்கு எறிந்தால் எறிந்தவர் ஓட வேண்டி வரும். தேனீக்கள் நாயைவிட பலவீனமானவைதான். ஆனால் அவை ஒன்று சேர்ந்து தாக்க வருவதால் ஓட வேண்டி வருகிறது. எனவே தமிழர்களும் தேனீக்கள் போல் ஒன்று சேர்ந்து தாக்க முற்பட்டால் எதிரி நிச்சயம் ஓடுவான்.

No comments:

Post a Comment