Saturday, November 30, 2019

திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ்அகதிகள்

செய்தி - திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ்அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி இன்று முதல் உண்ணாவிரதம்
.
மன்னிக்கவும் உறவுகளே!
எங்கள் தலைவர்கள் சஜித் பிரோமதாசாவை ஜனாதிபதியாக்குவதில் பிசியாக உள்ளார்கள். எனவே உங்கள் பிரச்சனையை இப்போது கவனிக்க முடியாது.
“சஜித் பிரேமதாசா ஜனாதிபதியானால் எங்களுக்கு விடுதலை கிடைக்குமா?” என்று நீங்கள் கேட்க நினைப்பீர்கள்.
“யார் வந்தாலும் உங்கள் விடுதலைக்கு உதவமாட்டார்கள்” என்பதே உங்கள் கேள்விக்கான எமது பதில் ஆகும்.
“அப்ப என்ன ம - - க்கு சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்க வேண்டும்”என்றும் நீங்கள் கேட்க நினைப்பிர்கள்.
சஜித் ஜனாதிபதியாக வந்தால் உங்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் அனைவருக்கும் எதுவும் கிடைக்கப் போhவதில்லை என்பது உண்மைதான்.
ஆனால் சஜித்திடமிருந்துதான் எமது தமிழ் தலைவர்களுக்கு 300 கோடி ரூபா பணப்பெட்டி வந்திருக்கிறது என்று அமைச்சர் ராஜித சேனரத்தின கூறுகிறார்.
எனவேதான் அவர்கள் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment