Saturday, November 30, 2019

ஈழத்து கருணாநிதி!

ஈழத்து கருணாநிதி!
செய்தி - தமிழ் இனத்திற்காக நான் சாவதற்கும் தயார் - சம்பந்தர் ஐயா
என்னடா இது தமிழ் இனத்திற்கு வந்த சோதனை?
சரி சரி சொகுசு பங்களாக்களை பறிக்கமாட்டோம் என்று நாமல் ராஜபக்சவை சொல்லச் சொல்லுங்கடா.
இல்லையென்றால் ஐயா இன்னும் என்னென்ன வசனம் எல்லாம் சொல்லித் தொலைக்கப் போகிறாரோ தெரியவில்லை.
நல்லவேளை! “என்னை நீங்கள் திருகோணமலை கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக மாறி உங்களை காப்பாற்றுவேன்” என்று இன்னும் ஐயா வசனம் பேசவில்லை.
( திருகோணமலையில் சம்பூரில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட தமது 500 ஏக்கர் நிலத்தை மீட்க தமிழ் மக்கள் போராடிய போது ஐயா சொகுசு பங்களாவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததை யாரும் இப்போது நினைக்க வேண்டாம்)
அல்லது, 1966ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு பனாகொடை ராணுவ முகாமில் பாம்புகளும் கொடும் தேளுகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்களுக்காக வாடினேன் என்றும் ஐயா இன்னும் வசனம் பேசவில்லை.
( கைது செய்யப்பட்டபோது மன்னிப்பு கடித்தம் எழுதிக் கொடுத்து முதன் முதலாக விடுதலையானதே இந்த ஜயா தான் என்பதையும் தயவு செய்து யாரும் நினைத்து விடாதீர்கள்)
வாழும்போதே இவர் எப்ப செத்து தொலைவார்; என்று மக்களால் தூற்றப்பட்ட தமிழ தலைவர்கள் இரண்டு பேர் ஒருவர் தமிழ் நாட்டில் கலைஞர் கருணாநிதி. இன்னொருவர் ஈழத்தில் சம்பந்தர் ஐயா.
ஆம் இவர் எமனும் மறந்த கிழவர்.

No comments:

Post a Comment