Saturday, November 30, 2019

• பை(BYE ), பை(BYE ) மைத்திரி அவர்களே!

• பை(BYE ), பை(BYE ) மைத்திரி அவர்களே!
நீங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றை மட்டுமே நிறைவேற்றியுள்ளீர்கள்.
அதாவது மீண்டும் ஒருமுறை போட்டியிடமாட்டேன் என்றீர்கள். அதன்படி போட்டியிடாமல் பதவி விலகி செல்கிறீர்கள்.
நீங்கள் பதவியில் இருந்தபோது கோத்தபாயாவை வழக்குகளில் இருந்து காப்பாற்றினீர்கள். எனவே அவரும் அந்த நன்றிக்கடனுக்காக உங்களுக்கு எந்த தொந்தரவும் தரமாட்டார் என நம்புகிறோம்.
ஆனால் நீங்கள் வாக்குறுதி அளித்தபடி அரசியல் கைதி சுதர்சனையாவது விடுதலை செய்திருக்கலாம்.
நீங்கள் பொதுபலசேனா ஞானதேரரை விடுதலை செய்தீர்கள். ஒல்லாந்து நாட்டு பெண்ணை கொலை செய்த கொலையாளியைக்கூட கடைசி நேரத்தில் விடுதலை செய்தீர்கள்.
சுதர்சனின் குழந்தைகளுக்கு தந்தையை விடுதலை செய்வதாக நீங்கள்தான் கூறினீர்கள். புதுவருடப்பிறப்பிற்கு முன்னர் தந்தை வீடு வருவார் என்று அந்த குழந்தைகளுக்கு ஆசை காட்டினீர்கள்.
ஆனால் அந்த சுதர்சனைக்கூட விடுதலை செய்ய உங்களுக்கு மனம் வரவில்லை. இத்தனைக்கும் தமிழ் மக்களின் வாக்குகளினால்தான் நீங்கள் பதவியையே பெற்றீர்கள்.
உங்களை சண்முகதாசனின் கம்யுனிஸ் கட்சியில் இருந்தவர் என்றார்கள். சிலர் உங்கள் மனைவி ஒரு தமிழர் என்றுகூட கூறினார்கள்.
நீங்கள் பதவியேற்றபோது செலவு வெறும் ஜயாயிரம் ரூபா என்று கூறினார்கள்
நீங்கள் செருப்புடனே நடந்து திரிகிறீர்கள். நீங்கள் வீட்டு சாப்பாட்டை கொண்டு வந்து உங்கள் கையாலே சாப்பிடுகிறீர்கள்; என்று எல்லாம் கூறி உங்களை எளிய ஜனாதிபதி என்றார்கள்.
ஆனால் நீங்கள் உங்கள் மகளுக்கு பல கோடி ரூபா பெறுமதியான சாராய பார் லைசென்சுகளை வழங்கியிருப்பதாக இப்போது அறிகிறோம்.
அதுமட்டுமல்ல எளிய ஜனாதிபதியான உங்களுக்கும் பிரதமருக்கும் தலா 16 கோடி ரூபாவுக்கு குண்டு துளைக்காத கார் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அறிகிறோம்.
ஆனால் முகங்களை மாற்றுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதற்கு ஒரு உதாரணமாக இனி நீங்கள் இருப்பீர்கள்.

No comments:

Post a Comment