Monday, January 22, 2024

ஒருமுறை சென்னையில் ஒரு லாட்ஜில்

ஒருமுறை சென்னையில் ஒரு லாட்ஜில் பொலிசார் ரெய்டு செய்து விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களையும் ஆண்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்காக காவல் நிலையத்தில் அவர்களின் பெயர் விபரங்களை கேட்டபோது அதில் ஒருவர் தான் இலங்கை அமைச்சர் என்று கூறியிருக்கிறார். உடனே அதிர்ச்சியடைந்த பொலிசார் சென்னையில் இலங்கை தூதுவருடன் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்கள். தூதுவர் “ஆம். அவர் எங்கள் அமைச்சர் தான்” என்று உறுதிப்படுத்தியதும் பொலிசார் “ஏன் சார் முதலே அமைச்சர் என்று கூறியிருக்கலாமே. இப்படி அசிங்கப்பட்டிருக்க தேவையில்லையே” என்று கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் பத்திரமாக அனுப்பிவிட்டார்கள். ஆனாலும் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துவிட்டது. அந்த மலையக அமைச்சரின் நிலை கண்டு சந்தி சிரித்தது இப்போது இன்னொரு தலைவர் தமிழ்நாட்டில் இருந்து நாலு நடிகைகளை அழைத்து வந்து தேசிய தைப் பொங்கல் என்கிறார். பாவம் மலையக மக்கள். வருடா வருடம் மண் சரிவில் பாதிக்கப்படுகின்றனர். குளவி கடியில் இறக்கின்றனர். சம்பள உயர்வு கேட்டு போராடுகின்றனர். இதுதான் மலையகம் 200?

No comments:

Post a Comment