Saturday, December 31, 2016

•தீர்வு கிடைக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே!

•தீர்வு கிடைக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே!
இந்த வருட இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவேன் என்று சம்பந்தர் அய்யா வாக்குறுதி அளித்திருந்தார்.
அவர் வாக்குறுதியளித்தபடி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளது.
எனவே இன்னும் 15 நாட்களில்,
•சிறையில் உள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை பெறுவார்கள்.
•காணாமல் போனோர் யாவரும் கண்டு பிடிக்கப்படுவார்கள்
•இடம்பெயர்ந்தோர் யாவரும் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
•வட கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் யாவும் அகற்றப்படும்.
•இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் யாவும் மக்களிடம் கையளிக்கப்படும்.
•திட்ட மிட்ட சிங்கள குடியேற்றம் நிறுத்தப்படும். தமிழர் நிலங்களில் பௌத்த விகாரைகள் கட்டுவது தடுக்கப்படும்.
மேற்கண்டவை யாவும் இன்னும் 15 நாட்களில் நடக்கும் என்று நம்புவோம்.
தான் வாக்குறுதியளித்தபடி இன்னும் 15 நாட்களில் தீர்வு பெற்றுத்தாராவிடின் உயிரை விடும் அளவிற்கு சம்பந்தர் அய்யா மானஸ்தன் இல்லைதான்.
ஆனாலும் இந்த வாக்குறுதியை அளித்தே தேர்தலில் வெற்றி பெற்றமையினால் தார்மீக ரீதியாக தனது பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது அவரது கடமையாகும்.
பட விளக்கம்-
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தன் கையால் தனக்கு குடை பிடிக்கிறார். சம்பந்தர் அய்யா ஏன் தனக்கு மற்றவர்களை குடை பிடிக்க வைக்கிறார் என்று நான் கேட்க விரும்பவில்லை. ஏனெனில் சம்பந்தர் அய்யா ஒபாமாவைவிட பெரிய தலைவராக அவரது விசுவாசிகள் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment