Saturday, December 31, 2016

• டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்

• டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்
மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2016)
மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது.
தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர்.
ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் தோழர் மாவோ அவர்கள்.
தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர்.
மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர்.
சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை.
சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.
குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின் நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது.
இலங்கையில் மாசேதுங் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தவர் தோழர் சணமுகதாசன் அவர்களும் அவரது தலைமையில் இயங்கிய கம்யுனிஸ்ட் கட்சியுமே.
இலங்கையில் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டப் பாதையை முன்வைத்தது மகத்தான மாசேதுங் சிந்தனைகளே.
தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவும் ஆயுதப் போராட்ட பாதையை தெரிவு செய்யவும் பெரும் பங்கு வகித்தது மாசேதுங் சிந்தனைகளே.
ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை இலங்கைஅரசு “பயங்கரவாதிகள்” என்றழைத்தது. தமிழர்விடுதலைக்கூட்டணி “பொடியன்கள்” என்றழைத்தது.
ஆனால் மாவோயிஸ்ட் தலைவரான தோழர் சண்முகதாசனே தமிழ் இளைஞர்களை முதன் முதலாக “போராளிகள்” என்று அழைத்தவர்.
அதுமட்டுமல்ல அவர் இதை ஜந்து கட்சி கூட்டத்தில் சிங்கள தலைவர்கள் மத்தியில் சிங்கள மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
யாழ்குடாநாட்டில் இருந்த சாதீய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்கள் மாவோயிச சிந்தனைவாதிகளே.
இலங்கையில் மாவோயிஸ்ட்டுகள் எதுவும் செய்யவில்லை என்று இன்று பேசுவோர் இவ் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
மாக்சிச லெனிசிச மாவோ சிந்தனையில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
இதுவே புரட்சியாளர்களின் வரலாற்று கடமையாகும்!

No comments:

Post a Comment