Saturday, December 31, 2016

வீடு கட்டுவதிலும் ஊழல் செய்ய முனையும் அரசு!

•வீடு கட்டுவதிலும் ஊழல் செய்ய முனையும் அரசு!
•சம்பந்தர் அய்யாவுக்கும் அதில் பங்கு உண்டா?
கடந்த மகிந்த ராஜபக்கச ஆட்சிக்காலத்தில் ஊழல் , லஞ்சம் யாவும் தலைவிரித்தாடியது. பசில்ராஜபக்ச “கமிசன் அமைச்சர்” என பகிரங்கமாக அழைக்கப்பட்டார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை மக்கள் தோற்கடித்தமைக்கு இவை ஒரு முக்கிய காரணம் ஆகும்.
தற்போது நல்லாட்சி செய்வதாக கூறும் ஆட்சியிலும் ஊழல் மறையவில்லை. அமைச்சர்கள் மட்டத்தில் அது தொடர்கிறது.
பொருத்து வீடுகளை யாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நிராகரித்த நிலையில் தற்போது வன்னியில் இதனை அமுல்படுத்த அரசு முயல்கிறது.
கிளிநொச்சி மற்றும் முல்லைதீவுகளில் 10000 பொருத்து வீடுகளை நிர்மாணிக்க மீள்குடியேற்ற அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக பல்தேசியக் கம்பனியான அர்சிலோர் மிட்டால் நிறுவனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்னர் ஒரு வீட்டிற்கு 21 லட்சம் ரூபா வழங்குவதாக அரசு மிட்டால் கம்பனியிடம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் மக்களின் எதிர்ப்பால் அது தற்போது 16 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
பல்தேசியக் கம்பனியான மிட்டல் நிறுவனம் தனது கழிவு இரும்பு உருக்குகள் மூலம் பொருத்து வீடு என்ற பெயரில் இரும்புக்கூடுகளை மக்களிடம் திணிக்க முயல்கிறது.
ஆனால் இதே 16 லட்சம் ரூபா செலவில் நல்ல தரமான கல்வீடுகளை கட்ட முடியும் என பல பொது நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பொது மக்களும் தமக்கு பொருத்து வீடுகள் வேண்டாம், கல் வீடே வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அரசும் அதன் அமைச்சர்களும் பல் தேசியக் கம்பனியுடன் சேர்ந்து ஊழல் செய்வதற்காக பொருத்து வீடுகளை மக்கள் மீது திணிக்க முயல்கின்றனர்.
முன்பு மகிந்த ராஜபக்ச கும்பல் ஊழல் செய்வதாக கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள் இன்று தாங்கள் ஊழல் செய்கின்றனர்.
ஆனால் ஊழல் செய்த மகிந்த ராஜபக்ச கும்பலை தோற்கடித்த மக்கள் தங்களையும் நாளை தோற்கடிப்பார்கள் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள தவறுகின்றனர்.
ஆனால் இங்கு கவலைக்குரிய விடயம் என்னவெனில் இதை தடுத்து நிறுத்த வேண்டிய தலைவர்களான சம்பந்தர் அய்யா மற்றும் சுமந்திரன் பொன்றொர் மௌனமாக இருப்பதே.
இவர்களின் மௌனம், ஒருவேளை ஊழல் பணத்தில் இவர்களுக்கும் ஒரு பங்கு வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை உருவாக்கிறது.
குறிப்பு- சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்தபடி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 10 நாட்களே உண்டு. அதனால்தான் அய்யா மௌனமாக இருக்கிறாரா?

No comments:

Post a Comment