Saturday, December 31, 2016

•இது ஊடக விபச்சாரம் இன்றி வேறு என்ன?

•இது ஊடக விபச்சாரம் இன்றி வேறு என்ன?
கனடாவில் உள்ள ஒரு தமிழ் ஊடகவியலாளர் பாலசிங்கம் இறப்பதற்கு முன் தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது “பிரபாகரன் ஒரு தீர்வுக்கு தயாராக இல்லை. யுத்தத்தால் அழியப் போகிறார்” என்று கூறியதாக கட்டுரை எழுதியுள்ளார்.
இந்த கனடா ஊடகவியலாளர் தன்னுடன் பாலசிங்கம் பேசியதாக கூறியது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ஒருவர் இறந்தபின்பு அவர் இப்படி கூறினார் என்று எழுதுவதைப் படிக்கும்போது எம்.ஜி.ஆர் சாகும்போது தன்னிடம் சத்தியம் கேட்டதாலே தான் அரசியலில் இருப்பதாக ஜெயலலிதா கூறித்திரிந்தது ஞாபகத்திற்கு வருகின்றது.
இந்த கனடா ஊடகவியலாளர் இந்திய அமைதிப் படைக்கு எதிரான யுத்தத்தின்போது மாத்தையா கூறாத வரிகளை கூறியதாக எழுதி, அதனால் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவால் விசாரிக்கப்பட்டு பேமஸ் ஆனவர்.
அதுமட்டுமல்ல தராக்கி சிவராம் கொல்லப்பட்டபோது அதனை கருணாவே செய்தார் என்று எதோ பக்கத்தில் நின்று பார்த்தது போல் விவரித்து எழுதியிருந்தார். அப்புறம் அக் கொலையை புளட் இயக்கதினரே செய்தனர் என்ற உண்மை வெளிவந்தபோதும் இவர் கொஞ்சம்கூட வெட்கமின்றி இருந்தார்.
அதேபோன்று லண்டனில் உள்ள ஒரு தமிழ் ஊடகவியலாளர் நடந்து முடிந்த யுத்தத்திற்கும் அதில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இறந்ததற்கும் பிரபாகரனே காரணம் என்று புத்தகம் எழுதி விற்றுத் திரிகிறார்.
புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக கூறிய பின்பு 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு பிரபாகரன் எப்படி காரணம் ஆகும் என்று கேட்டால் இந்த புத்தகம் எழுதி விற்று திரியும் ஊடகவியலாளர் பதில் சொல்வதில்லை.
சரி. இந்த ஊடகவியலாளர் கூறுவது போல் தீர்வு வராமல் யுத்தம் ஏற்பட்டு அழிவு வந்தமைக்கு பிரபாகரன்தான் காரணம் என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால் கடந்த ஏழு வருடமாக பிரபாரன் இல்லையே. ஏன் இலங்கை அரசால் ஒரு தீர்வை தர முடியவில்லை?
இலங்கை அரசு தீர்வு தர விரும்பியது உண்மை என்றால் அதை பிரபாகரன்தான் குழப்பினார் என்பது உண்மையானால் அந்த தீர்வை ஏன் இன்னும் இலங்கை அரசு தரவில்லை என்று இந்த ஊடகவியலாளர்கள் கூறுவார்களா?
பிரபாகரனால்தான் தீர்வு கிடைக்காமற் போயிற்று என்று எழுதும் இந்த ஊடகவியலாளர்கள் இலங்கை அரசு தீர்வு தராமல் இழுத்தடிப்பது தவறு என்று ஏன் ஒருவரி எழுத முடியவில்லை?
இவர்கள் இந்திய தூதரை திருப்திப்படுத்த எழுதும் எழுத்துகளை ஊடகவியலாளர் என்று சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் வெளியிட்டு எரிச்சல் ஊட்டுகிறார்கள்.
இப்போதெல்லாம் இப்படியான ஊடக விபச்சாரங்களை காணும்போது ஊடகவியலாளர் என்றாலே எரிச்சலும் ஆத்திரமும்தான் வருகின்றது.

No comments:

Post a Comment