Saturday, December 31, 2016

தாயகத்தில் உள்ளவர்கள் குறிப்பாக இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் இந்த வீடியோவை பார்வையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

• தாயகத்தில் உள்ளவர்கள் குறிப்பாக இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள்
இந்த வீடியோவை பார்வையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
கனடா லண்டன் நாடுகளில் மட்டுமா முட்டாள் தமிழன் இருக்கிறான், நோர்வேயிலும் இருக்கிறான் என சிலர் நிரூபித்துள்ளனர்.
சாமத்தியசடங்கு நடத்தியது மட்டுமன்றி அதை ஆடம்பரமாக செய்து பொதுவில் பார்வைக்கும் விட்டுள்ளனர் இந்த முட்டாள்கள்.
கீழ்வரும் இணைப்பில் அந்த வீடீயோவை காணலாம்.
ஒருவருடைய தனிப்பட்ட விடயத்தை பொதுவில் பேசுவது தவறு என்று சிலர் இப்ப ஓடிவந்து எமக்கு பாடம் எடுப்பார்கள்.
ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பொதுவில் வைத்த ஒரு விடயத்தை பொது மக்களின் நன்மை கருதியே நாம் பேச முற்படுகிறோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
வன்னியில் மக்கள் வறுமையில் சாகும்போது வெளிநாட்டில் இப்படி ஒரு ஆடம்பர நிகழ்வு தேவைதானா என இந்த முட்டாள்களிடம் நாம் கேட்கப் போவதில்லை.
தமிழகத்தில் கும்மிடிப்பூண்டி முகாமில் புயலால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு இன்னும் மின்சாரம் கூட வழங்கப்படவில்லை. இந் நிலையில் வெளிநாட்டில் இப்படி ஒரு சாமத்திய சடங்கு தேவைதானா எனவும் அவர்களிடம் நாம் கேட்கப் போவதில்லை.
இத்தகைய ஆடம்பர செலவுகளை தவிர்த்து அந்த பணத்தை தாயகத்தில் கல்வி கற்ற விரும்பும் அனாதை சிறுவர்களுக்கு வழங்கினால் என்ன எனவும் இவர்களை நாம் கேட்கப் போவதில்லை.
தமது திருமணத்தை முன்னிட்டு அண்மையில் டென்மார்க் தம்பதிகள் கைதடி அனாதை ஆச்சிரமத்தில் உள்ளவர்களுக்கு உணவு அளித்தது போல் இவர்களும் உதவி செய்தால் என்ன என நாம் கேட்கப் போவதில்லை.
இவர்களிடம் நாம் கேட்க விரும்புவது என்னவென்றால் இப்படி ஆடம்பரமாக செலவு செய்து விழா நடத்தி அதை பொதுவில் மற்றவர்கள் பார்வைக்காக ஏன் விடுகிறீர்கள்?
அதனால் நீங்கள் அடையும் பயன் என்ன? அல்லது சந்தோசம்தான் என்ன?
நீங்கள் திருந்தப் போவதே இல்லையா?

No comments:

Post a Comment