Saturday, December 31, 2016

•இரண்டு மானஸ்தர்களும் அவர்களின் வாக்குறுதிகளும்!

•இரண்டு மானஸ்தர்களும் அவர்களின் வாக்குறுதிகளும்!
இந்திய பிரதமர் மோடி 50 நாட்களின் நோட்டு பிரச்சனை தீரும் என்றும் அவ்வாறு தீராவிட்டால் தன்னை உயிரோடு கொளுத்தும்படி வாக்குறுதி வழங்கினார்.
தமிழர் தலைவர் சம்பந்தர் அய்யா இந்த வருட இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
இருவருடைய வாக்குறுதிகளும் நிறைவேற்றுவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. அதாவது 24 மணித்தியாலம் மட்டுமே உள்ளது.
இருவருமே தமது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல நிறைவேற்ற முடியாது என்பதை நன்கு தெரிந்தே மக்களுக்கு பொய் கூறியுள்ளனர்.
தெரியாமல் செய்வது தவறு. தெரிந்து செய்வது குற்றம். தவறு மன்னிக்கப்டலாம். குற்றம் தண்டிக்கப்ட வேண்டும்.
மோடியும் சம்பந்தர் அய்யாவும் தெரிந்தே பொய் பேசியுள்ளனர். தெரிந்தே மக்களை ஏமாற்றியுள்ளனர்.
எனவே மோடியும் சம்பந்தர் அய்யாவும் நிச்சயம் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும். ஏனெனில் இனி இவர்கள் போல் இன்னொரு அரசியல்வாதி மக்களை ஏமாற்ற முயலக்கூடாது.
மோடியும் சம்பந்தர் அய்யாவும் பதவி விலக வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்கள் பதவியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது.
மக்கள் மாட்டு மந்தைகளும் அல்ல. மோடியும் சம்பந்தர் அய்யாவும் மேய்ப்பன்களும் அல்ல. அவர்கள் கூறுவதற்கெல்லாம் மக்கள் ஆமாம் போடுவார்கள் என்ற நிலை இனி இருக்கக்கூடாது.
மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள் என்பதை காட்ட வேண்டும். இனியும் அவர்கள் மக்கள் முதுகில் சவாரி செய்ய அனுமதிக்க முடியாது.

No comments:

Post a Comment