Saturday, December 31, 2016

•மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை சம்பந்தர் அய்யாவிடம் எடுத்துச் சொல்வது யாரு?

•மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை
சம்பந்தர் அய்யாவிடம் எடுத்துச் சொல்வது யாரு?
யாழ் நகரில் மாற்றுதிறனாளியான பெணகள் தமக்கு நீதி கோரி அடையான போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நீதி வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும். இவர்களுக்கு நீதி மறுக்கப்படுவது குறித்து எந்த தமிழ் தலைவர்களும் அக்கறை கொள்ளவில்லை.
ஜனாதிபதி முதல் சம்பந்தர் அய்யா வரை அனைவருக்கும் தமது கொரிக்கையினை இந்த பெண்கள் அனுப்பியுள்ளனர். ஆனால் யாருமே தலையிட்டு தீhத்து வைக்கவில்லை.
சம்பந்தர் அய்யா தமிழ் மக்களின் வாக்குகளின் மூலமே பதவி பெற்றுள்ளார். அவர் தமிழ் மக்களின் குறைகளை கேட்டு அதனை அரசுக்கு தெரிவித்து நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டிய கடமை உள்ளவர்.
ஆனால் அவரோ மக்களை தேடிச் சென்று குறைகளை கேட்பது மட்டுமல்ல. குறை சொல்ல வரும் மக்களிடம் அக்கறையாக கேட்பதும் இல்லை.
சிறையில் உள்ளவர்களின் விடுதலை குறித்து பேசச் சென்ற இளைஞர்களிடம் பத்திரிகை படித்துக்கொண்டே திறப்பு என்னிடம் இல்லை என்று நக்கலாக அவர் பதில் சொன்னதை கண்டோம்.
மாற்று திறனாளி பெண் யாழ் நீதிமன்ற வாசலில் அடையாளப் போராட்டம் செய்யும் அதே நேரத்தில் எமது சம்பந்தர் அய்யா தனது நண்பர் கட்டும் கோயில் விழாவிற்கு சென்றுள்ளார்.
திருகோணமலையில் அவரது நண்பர் கட்டும் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மிக்க மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
வன்னியில் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் தன் பிள்ளைகளுடன் தற்கொலை செய்யும் அவலத்தின் நடுவே சம்பந்தர் அய்யா பல லட்சம் ரூபா செலவில் நண்பன் கட்டும் கோயில் விழாவில் கலந்து கொள்கிறார்.
மக்கள் சேவைதான் மகேசன் சேவை என்கிறார்கள். அப்படியென்றால் சம்பந்தர் அய்யா மக்களுக்கு தானே சேவை செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்ல, மக்களின் வோட்டின் மூலம் பதவி பெற்றவர்கள் மக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டவர்கள் அல்லவா!
வாழ்நாள் முழுக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவி. மாதம் தோறும் 2 லட்சம் ரூபா சம்பளம். அதுமட்டுமன்றி எட்டு கோடி ரூபா செலவில் சொகுசு வாகனம். காவலுக்கு சிஙகள பொலிஸ். இதுபோதாது என்று இந்தியாவில் குடும்பம்.
இத்தனையும் அனுபவிக்கும் சம்பந்தர் அய்யாவால் தமிழ் மக்களின் குறைகளை தீர்த்து வைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை அவர்களின் குறைகளைக்கூட அக்கறையாக கேட்க முடியாதா?
நண்பர்களின் விழாக்களுக்கு சென்று அவர்களை மகிழ்விக்கும்; சம்பந்தர் அய்யாவால் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு ஆறுதல் வாhத்தை கூற முடியாதா?
இப்படி இருக்கும் சம்பந்தர் அய்யாவுக்கு எப்படி கனடாவில் இருக்கும் நம்மவர் சிலரால் “வாழ்நாள் வீரர்” விருது கொடுக்க முடிகிறது?
பிளீஸ் ! இனியாவது மக்களை சந்தித்து குறைகளை கேட்கும்படி சம்பந்தர் அய்யாவுக்கு யாராவது சொல்லுங்கள்.
மக்களுக்கு சேவை செய்வதே மகேசனுக்கு செய்யும் சேவை என்பதையாவது அந்த பெரிய மனிதருக்கு கொஞ்சம் விளக்கி கூறுங்களேன்.
குறிப்பு- சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்தபடி தமிழ் மக்களுக்கு திர்வு கிடைக்க இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளது.

No comments:

Post a Comment