Monday, December 12, 2016

•செய்வீர்களா? செய்வீர்களா?

•செய்வீர்களா? செய்வீர்களா?
எழுவர் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் என்று ஜெயா அம்மையாருக்கு பலரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.
எழுவர் விடுதலை ஜெயா அம்மையாரின் விருப்பம் என்பது உண்மையானால் அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களது கடமையாகும்.
ஜெயா அம்மையாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக கூறினால் மோடியின் மத்திய அரசு உட்பட யாருமே எதிர்ப்பு காட்டமாட்டார்கள்.
எனவே இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும். எழுவர் விடுதலையில் அக்கறை உள்ளவர்கள் யாவரும் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.
எழுவர் விடுதலை மட்டுமன்றி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
திருச்சியில் தமிழக அரசின் கீழ் இருக்கும் சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் மூடப்பட வேண்டும் என ஜெயா அம்மையாருக்கு அஞ்சலி செலுத்திய அனைத்து ஈழ அமைப்புகளும் தலைவர்களும் கோர வேண்டும்.
செய்வீர்களா? செய்வீர்களா?

No comments:

Post a Comment