Saturday, December 31, 2016

•உலகில் இனி எந்தக் குழந்தைக்கும் இந்நிலை வேண்டாம்!

•உலகில் இனி எந்தக் குழந்தைக்கும் இந்நிலை வேண்டாம்!
இந்த சிரிய நாட்டு தாய்க்கு தன் குழந்தையைக் காப்பாற்ற ஒரு காட்போட் பெட்டியாவது கிடைத்திருக்கிறது. ஆனால் முள்ளிவாய்க்காலில் இதுகூட எம் தாய்மாருக்கு கிடைக்கவில்லையே.
சிரியாவில் பங்கரில் இருந்த குழந்தைகளை கொல்லாமல் விட்டிருக்கிறார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் பங்கரில் இருந்த தாயையும் பிள்ளைகளையும் சேர்த்து புல்டோசரால் நசுக்கியல்லவா கொன்றார்கள்.
எம் தமிழ் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை என்று உரத்து நியாயம் கேட்கக்கூட முடியதவர்களாக இருக்கிறோம்.
கோத்தபாய ராஜபக்சகூட 6 அயிரம் தமிழ் அப்பாவிகள் கொல்லப்பட்டுவிட்டதாக ஒத்துக் கொள்கிறார்.
ஆனால் எம் சிலர் அதைக்கூட ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர்.
புலிகளே அத்தனை தமிழரையும் கொன்றனர் என்று லண்டனில் ஒரு ஊடகவியலாளர் புத்தகம் எழுதுகிறார்.
இந்த அழிவுகளுக்கு பிரபாகரனே காரணம் என்று பாலா அண்ணை சாகமுன்னர் தனக்கு ரெலிபோனில் கூறியதாக கனடாவில் ஒரு ஊடகவியலாளர் எழுதுகிறார்;.
எம் இனத்திற்கு நடந்த இந்த அவலம் இனி எந்த இனத்திற்கும் நடக்க வேண்டாம்.
உலகில் இனி எந்தக் குழந்தைக்கும் இந் நிலை வரவே வேண்டாம்.

No comments:

Post a Comment