Saturday, December 31, 2016

•எரிவது சம்பந்தர் அய்யாவின் உருவப்படம் மட்டுமல்ல அவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் எரிகிறது!

•எரிவது சம்பந்தர் அய்யாவின் உருவப்படம் மட்டுமல்ல
அவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் எரிகிறது!
காணாமல் போனோரின் உறவுகள் எரித்தது
சம்பந்தர் அய்யாவின் படம் மட்டுமல்ல
மாறாக அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான்.
நீண்ட உறக்கம் கொண்டது போதும்
எழுந்து வாருங்கள் சம்பந்தர் அய்யா!
இதுவரை மௌனமாய் இருந்தது போதும்
இனியாவது வாய் திறந்து
தீர்வு பற்றி ஏதாவது சொல்லுங்க அய்யா!
இல்லையேல்,
இன்று உருவப் படத்தை கொளுத்தியவர்கள்
நாளை உங்களையே கொளுத்திவிடுவார்கள்.
மக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அய்யா
அதைப் புரிந்து கொண்டு இனியாவது நடவுங்கள் அய்யா!

No comments:

Post a Comment