Saturday, December 31, 2016

•இழப்பு துயரத்தில் இருந்து மீள வழியில்லையா?

•இழப்பு துயரத்தில் இருந்து மீள வழியில்லையா?
இங்கிலாந்தில் பேர்மிங்காம் நகரில் இருக்கும் மனநல மருத்துவர் தம்பிராசா அவர்கள் உளவியல் கட்டுரைகள் நூல்கள் பல எழுதிவருகிறார்.
அண்மையில் அவர் எழுதிய இழப்பு துயரத்தில் இருந்து மீள வழியில்லையா என்னும் கட்டுரை தமிழ் இந்துவில் 10.12.16 யன்று வெளிவந்துள்ளது.
“நான் இறந்த பிறகு
எனக்காகக் கொஞ்சம் அழு, கண்ணீர் விடு
நம் இனிமையான தருணங்களை
அவ்வப்போது நினைத்துக்கொள்
ஆனால், கொஞ்ச நேரம் நினைத்தால் போதும்.
பின் அந்த நினைவுகளைத் தாண்டிச் செல்
நீ உயிரோடு இருக்கும்வரை
உன் எண்ணங்கள் உயிருள்ளவர்களுடனேயே இருக்கட்டும்”
மனித வாழ்வில் இழப்புகள், குறிப்பாகக் குடும்பத்தினர் ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்புகள், தவிர்க்க முடியாதவை.
அன்பார்ந்த ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை.
ஒரு தாய் தன் மகனை இழப்பதாலும், ஒரு கணவன் தன் மனைவியைப் பறிகொடுப்பதனாலும் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கப் பல ஆண்டுகள் ஆகலாம்.
ஒரு குடும்பத்தில் ஏற்படும் ஓர் அகால மரணம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். அந்த மரணத்தின் கருநிழல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதே இல்லை.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏறக்குறைய 20,000 பேர் ‘காணாமல் போனார்கள்’. இவர்களின் பெற்றோர், உறவினர் படும் இழப்புத் துயரமும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.
தீராத இழப்புத் துயரத்துக்கு உளவியல் ஆலோசனை அவசியம். கடுமையான இழப்புத் துயரம் மனச்சோர்வுக்கும் வழி வகுத்துவிடலாம். எனவே, அதற்கு ஆலோசனை பெறுவதே சிறந்தது.

No comments:

Post a Comment