Monday, December 12, 2016

•ஏன் “அம்மா” ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள்?

•ஏன் “அம்மா” ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள்?
பத்து ஆண்டுகள் தமிழக முதலமைச்சராகவும் பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த காமராஜர் அவர்கள் மறைந்தபோது அவரிடமிருந்த சொத்துகள் வருமாறு,
சட்டைப் பையில் - 100 ரூபா
வங்கிக் கணக்கில் - 125 ரூபா
கதர் வேட்டி - 4
கதர் துண்டு – 4
கதர் சட்டை – 4
செருப்பு – 2 சோடி
கண்ணாடி – 1
போனா – 1
சமையல் பாத்திரங்கள் - 6
ஜெயா அம்மையார் சொத்து மதிப்பு
அவராகவே தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்த மதிப்பு 113 கோடி ரூபாய்.
அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரச வழக்றிஞர் ஆதாரங்களுடன் சமர்ப்பித்த சொத்து மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபா
ஆனால் தற்போது அவருடைய உண்மையான சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ருபா என கூறப்படுகிறது.
ஒரு ரூபா சம்பளம் பெற்ற ஜெயா அம்மையார் 5 வருட முடிவில் 5 ஆயிரம் கோடி ரூபா சம்பாதித்தது எப்படி என்று கேட்ட போது சொத்து சேர்ப்பது குற்றம் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இங்கு வேடிக்கை என்னவெனில் ஜெயா அம்மையார் 7 ஆயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்து விட்டார் என்று ஆதாரங்களைக் காட்டி தேர்தல் பிரச்சாரம் செய்தவர் கலைஞர் கருணாநிதி. தனக்கு 50 லட்சம் ரூபா கடன் இருப்பதாக அவர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
அதுவும் தன் மகள் கனிமொழியிடமே அந்த பணத்தை கடன் பட்டுள்ளாராம். அதுசரி கனிமொழி ஒரு கவிஞர். அவர் கவிதை எதுவும் ஒரு கோடி ரூபா விற்றதாக யாரும் அறியவில்லையே? அப்படியென்றால் அவருக்கு எப்படி பணம் வந்தது?
குறுகிய காலத்தில் கோடிக் கணக்கான பணம் சம்பாதிக்கவும் அதற்காக எவ்வித தண்டனையும் பெறாமல் தப்பிப்பதற்கும் ஒரே வழி அரசியல்தான் என பலரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதனால்தான் அவர்கள் “அம்மா ஆட்சி அமைப்போம்” என்று கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment