Saturday, December 31, 2016

•சிறு பொறிதானே பெரும் காட்டு தீயை மூட்டுகிறது!

•சிறு பொறிதானே பெரும் காட்டு தீயை மூட்டுகிறது!
செய்தி- மலேசியாவில் ஜனாதிபதி மைத்திரிக்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
20 பேர்தானே வந்துள்ளனர் என்று சில அரசு விசுவாசிகள் படம் போட்டு கிண்டல் செய்கின்றனர்.
ஆனால் இது கூடிவிட்டு கலைந்து போகும் வெறும் கூட்டம் அல்ல. இது பணம் கொடுத்து கூட்டி வந்த கூட்டமும் இல்லை.
இது தானாக கூடிய கூட்டம் மட்டுமல்ல. எதிர்காலத்தில் ஆயிரம் ஆயிரமாக வளரப் போகும் கூட்டம்.
இவர்கள் தங்கள் பிரச்சனைக்காக கூடவில்லை. மாறாக தமது உடன் பிறப்புகளாக ஈழத் தமிழரை நினைத்து இன உணர்வில் கூடிய கூட்டம்.
இத்தனை காலமும் தமிழகத்தில் மட்டுமே இப்படியான ஈழ ஆதரவு கூட்டங்களை கண்டு வந்தோம். ஆனால் இப்போது அண்மைக்காலமாக மலேசியா சிங்கப்பூர் நாடுகளிலும் இதனை காண்கிறோம்.
ஈழத் தமிழன் அனாதை என்றும் அவனை கொன்று குவித்தால் கேட்க யாருமே இல்லை என்றுமே இதுவரை இலங்கை இந்திய அரசுகள் நினைத்து வந்தன.
ஆனால் தற்போது உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன உணர்வோடு ஒன்று சேர்ந்து வருவது இவர்களுக்கு கலக்கத்தைக் கொடுக்கிறது.
இதைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அன்றே கூறினார் “ எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்.இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என்று. அவர் கண்ட கனவு இன்று நனவாகிறது.
எனவே உலக தமிழினத்தின் ஒற்றுமையாய் ஒரு சிறு பொறியை மலேசிய தமிழர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். அது பெரும் காட்டு தீயாக நிச்சயம் மாறும்.
வரலாற்றில் மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய எழுச்சிகள் யாவும் முதலில் ஒரு சிலருடனே ஆரம்பித்தத்தை நாம் காண்கிறோம்.
அதேபோல் இதனையும் நாம் மாற்றிக் காட்டுவோம் எமது எதிரிகளுக்கு!

No comments:

Post a Comment