Saturday, December 31, 2016

•பறவைகளுக்காக இரங்குவோர் இந்த அகதிகளுக்காகவும் கொஞ்சம் இரங்கக்கூடாதா?

•பறவைகளுக்காக இரங்குவோர்
இந்த அகதிகளுக்காகவும் கொஞ்சம் இரங்கக்கூடாதா?
வார்தா புயலினால் பல மரங்கள் விழுந்து விட்டன என்றும் இனி காக்கை குருவிகள் எங்கு வாழும் என ஒரு நடிகை தொலைக்காட்சியில் மனம் இரங்கி கேட்கிறார்.
இந்த நடிகையின் கண் முன்னே கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் வாழ்ந்தவர்கள் புயலினால் பாதிக்கப்பட்டு நிற்பது ஏனோ இரக்கத்திற்குரியதாக தெரியவில்லை.
அகதிகள் என்றால் அவர்கள் பறவைகளைவிடக் கேவலமானர்களா? அவர்களும் மனிதர்கள் இல்லையா?
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் 980 குடும்பங்களைச் சேர்ந்த 3800 அகதிகள் வசித்து வருகின்றனர்.
வார்தா புயலினால் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். 200 க்கு மேற்பட்ட குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன. சுமார் 200 மரங்கள் விழுந்துள்ளன.
மின்சார துண்டிப்பு, குடி நீர் தட்டுப்பாடு காரணமாக அகதிகள் மிகவும் கஸ்டப்படுகின்றனர். முகாமுக்கு அருகிலேயே தாசில்தார் அலுவலகம் இருக்கிறது. ஆனால் கடந்து நான்கு நாட்களாக ஒரு அதிகாரிகூட வந்து எட்டிப் பார்க்கவில்லை.
அங்கு இருக்கும் அகதிகள் தமக்கு பாய், போர்வை, மெழுகவர்த்தி, தீப்பெட்டி போன்றவை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என கேட்கிறார்கள். ஆனால் அதைக்கூட கொடுத்து உதவ யாரும் இரங்கவில்லை.
என்ன செய்வது? வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் பறவைகளுக்கு இரக்கம் காட்டக்கூட சிலர் இருக்கிறார்கள். ஆனால் அகதிகளுக்கு இரக்கம் காட்ட யாருமே இல்லையே!
புயல் நிவாரண நிதியாக 50 ஆயிரம் கோடி ரூபா தரும்படி தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
அதிகளவு நிதியை வழங்குமாறு வைகோ அவர்களும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் மோடி அரசு வெறும் 500 கோடி ரூபாவையே புயர் நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
வருடம்தோறும் 85 ஆயிரம் கோடி ரூபாவை தமிழகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு புயல் நிதியாக வெறும் 500 கோடி ரூபாவையே ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் இந்த 85 அயிரம் கோடி ரூபா மிஞ்சுவதோடு நம்பி வந்த ஈழ அகதிகளையும் நன்கு கவனித்திருக்க முடியும் அல்லவா?
தமிழா நீ எப்போது இதனை சிந்திக்கப் போகிறாய்?

No comments:

Post a Comment