Saturday, December 31, 2016

•இதுதான் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியா?

•இதுதான் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியா?
கேரளாவில் மார்க்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அக் கட்சி அண்மையில் மறைந்த பிடல் காஸ்ரோவுக்கு கியூபா சென்று அஞ்சலி செலுத்தியது.
ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த பிடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
புரட்சியைக் கைவிட்டு தேர்தல் பாதைக்கு சென்றுவிட்ட இந்த போலிக் கம்யுனிஸ்டுகளிடம் ஏன் இந்த முரண்பாடு என்று கேட்பதில் அர்த்தமில்லைதான்.
ஆனால் “மாவோயிஸ்டுகள் தேச விரோதிகள் இல்லை. அவர்கள் தேச பக்தர்கள்” என்று உச்ச நீதிமன்றம் கூறிய பின்பும் மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொல்வது என்ன நியாயம்?
மாவோயிஸ்டு என்பதற்காக ஒருவரை கைது செய்யக்கூடாது என்று கேரள உயர்நீதிமன்றமே தெரிவித்த பின்பும் மாவோயிஸ்டு என்று கூறி சுட்டுக் கொல்வது என்ன நியாயம்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் அஜீதா அவர்களை, அவர் மீது எந்த வழக்கோ அல்லது குற்றச்சாட்டோ அற்ற நிலையில் போலி மோதலில் கொன்றது என்ன நியாயம்?
சுட்டுக்கொன்றது மட்டுமல்ல அவரது உடலை உறவினர்களோ அல்லது நண்பர்களிடம் ஒப்படைக்காமல் எரிக்க முயன்றது என்ன நியாயம்?
வழக்கறிஞர் அஜீதாவுடன் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் குப்புராஜின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டமைக்காக கேரள பாலிடெக்னிக்கில் பணியாற்றிய மக்கள் உரிமை ஆர்வலர் ரஜீசை பணி நீக்கம் செய்தது என்ன நியாயம்?
வழக்கறிஞர் அஜிதா மற்றும் குப்புராஜ் ஆகியோர் போலி மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து குரல் எழுப்பிய “போராட்டம்” அமைப்பைச் சேர்ந்த தோழர் ராவுண்ணியை கைது செய்தது என்ன நியாயம்?
அஜிதா மற்றும் குப்புராஜ் படுகொலையைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய தோழர் திணேஸ் மற்றும் தோழர் பார்த்திபன் ஆகியோரைக் கைது செய்தது என்ன நியாயம்?
கேரளாவில் நடப்பது கம்யுனிஸ்ட் கட்சியின் ஆட்சியா? அல்லது பொலிஸ் ஆட்சியா?

No comments:

Post a Comment