Saturday, December 31, 2016

•கலைஞர் இப்ப என்ன சொல்லப் போகிறார்?

•கலைஞர் இப்ப என்ன சொல்லப் போகிறார்?
முள்ளிவாய்க்கால் அழிவிற்கு இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசும் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்.
ஆனால் இதற்கு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியும் உடந்தையாக இருந்தார் என்ற தகவலை சிவசங்கர் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்பு அனந்தி சசிதரன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியபோது இது பொய் என்றும் அனந்தி யார் என்றே தெரியாது என்றும் கனிமொழி கூறியிருந்தார்.
ஆனால் இப்போது சிவசங்கர் மேனன் எழுதிய நூலில் மத்திய அரசின் விடுதலைப் புலிகள் அழிப்பு முயற்சிகளுக்கு கலைஞர் கருணாநிதியின் ஆதரவு இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இனி சிவசங்கர் மேனன் யார் என்று தமக்கு தெரியாது என்று கனிமொழியோ அல்லது கருணாநிதியோ கூறக்கூடும்.
ஆனால் நாம் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் இவர்கள் விடுதலைப் புலிகளை மட்டும் அழிப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை.
ஏனெனில் புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக கூறிய பின்பு 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை கொன்றுள்ளனர்.
எனவே முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இனப் படுகொலைக்கு கலைஞர் கருணாநிதியும் துணை போயிருக்கிறார் என்பதே உண்மை.
பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதன் மூலம் ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க முடியுமா என்று இந்திய அரசால் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட சோதனைக் களமே முள்ளிவாய்க்கால்.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! எத்தனை ஆயிரம் பேரைக் கொன்று குவித்தாலும் இலங்கை இந்திய அரசுகளின் கனவு நிறைவேற இடமளியோம்.
மீண்டும் எழுந்து நிற்போம். அதுவும் விரைவில் எழுந்து நிற்போம்.
முன்னெப்போதையும்விட பலமாக எழுந்து நிற்போம். இது உறுதி

No comments:

Post a Comment