Saturday, December 31, 2016

நேற்று இலங்கையில் முள்ளிவாய்க்கால் இன்று சிரியாவில் அலெப்போ நாளை எந்த இடத்தில்?

•நேற்று இலங்கையில் முள்ளிவாய்க்கால்
இன்று சிரியாவில் அலெப்போ
நாளை எந்த இடத்தில்?
முள்ளிவாய்க்காலில் போட்டது கொத்துக் குண்டுகள்
காஸ்மீரில் சுடப்பட்டது பெல்லட் குண்டுகள்
அலெப்போவில் வீசப்பட்டது பேரல் குண்டுகள்.
இனி அடுத்து அணு குண்டுகளா என்ன?
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு மகிந்த தண்டிக்கப்பட்டிருந்தால்
இன்று சிரிய அதிபர் ஆசாத்திற்கு இந்த தைரியம் வந்திருக்குமா?
ஜ.நா கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
அதன் எந்த விதிகளாலும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை.
மதங்களாலும் அதன் கடவுள்களாலும் கூட மக்களை காப்பாற்ற முடியவில்லை.
பயங்கரவாத ஒழிப்பின் பெயரால் ஆயிரக் கணக்கான மக்கள் அழிக்கப்படுகின்றனர்.
ஜரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இயேசு பிறப்பிற்காக வண்ண விளக்குகள் அலங்கரிக்கின்றன.
கடைகளில் கிறிஸ்மஸ் வியாபாரம் மும்முரமாக நடக்கின்றன.
வீதிகளிலும் மண்டபங்களிலும் வீடுகளிலும் விருந்துகள் நடக்கின்றன
ஆனால் உலகின் இன்னொரு மூலையில் மக்கள் மீதே ஈவுரக்கமின்றி குண்டுகள் போடப்படுகின்றன.
சிறு குழந்தைகள்கூட கொல்லப்படுகின்றன. உணவு இல்லை. உறங்க இடமில்லை. மருத்துவ வசதிகூட இல்லை.
ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து மக்கள் மீது யுத்தத்தை திணிக்கின்றன.
வல்லரசுகள் இரக்கமின்றி தமது ஆயுத வியாபாரத்தை நடத்துகின்றன.
இதனை ஜ.நா வோ அல்லது கடவுள்களோ தடுத்து நிறுத்தப் போவதில்லை.
திணிக்கப்படும் யுத்தங்களை புரட்சியாக மாற்றுவதைவிட வேறு வழியில்லை.

No comments:

Post a Comment