Monday, December 12, 2016

•கேட்டது நீதி. ஆனால் கிடைத்ததோ வீதி!

•கேட்டது நீதி. ஆனால் கிடைத்ததோ வீதி!
யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என சம்பந்தர் அய்யா உறுதியளித்திருந்தார்.
அவர் உறுதியளித்தபடி இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மாணவன் பெயரில் வீதி கிடைத்துள்ளது.
தமிழ் மக்கள் கோரியது மாணவன் படுகொலைக்கான நீதி. ஆனால் தலைவர்கள் பெற்றுத் தந்திருப்பதோ மாணவன் பெயரில் வீதி.
தீர்வு கிடைக்க இன்னும் 25 நாட்கள் மட்டுமே!
சம்பந்தர் அய்யா உறுதியளித்தபடி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 25 நாட்கள் மட்டுமே உள்ளது.
தமிழ் மக்கள் கோரியிருப்து தீர்வு. ஆனால் சம்பந்தர் அய்யா என்ன கருமத்தை பெற்றுதரப் போகிறாரோ என்று அச்சமாய் இருக்கிறது.
நீதி கேட்க வீதியை பெற்று தந்தவர்கள்
தீர்வு கேட்க என்ன இழவைப் பெற்றுதரப் போகிறார்களோ?
எல்லாம் தமிழ் மக்களின் தலைவிதி?

No comments:

Post a Comment