Saturday, October 26, 2019

•என்னடா இது பகவானுக்கு வந்த சோதனை?

•என்னடா இது பகவானுக்கு வந்த சோதனை?
கோயிலுக்குள் இருக்கும்போது “கடவுள்” என்கிறோம்
அதுவே திருட்டு போய்விட்டால் “சிலை திருட்டு” என்கிறோம்
அப்படியென்றால் “கல்கி மனைவியுடன் ஓட்டம்” என்றுதானே போடவேண்டும்.
அது ஏன் “கல்கி பகவான் ஓட்டம்” என்கிறார்கள்?
கடவுள் இருக்குது என்பவனையும் நம்பலாம்
கடவுள் இல்லை என்பவனையும் நம்பலாம்
ஆனால் நான்தான் கடவுள் என்பவனை ஒருபோதும் நம்பக்கூடாது.
இந்த கல்கி பகவானுக்கு இந்தியாவில் மட்டுமல்ல
இங்கிலாந்து கனடா எல்லாம் நம்மவர்கள் பக்தர்களாக இருக்கிறார்கள்.
மாவீரர் தினத்திற்கு செலவு செய்யப்படுவது பற்றி கேள்வி கேட்பவர்கள்
இந்த (ஆ)சாமிகளுக்கு வழங்கும் பணம் குறித்து
ஒருபோதும் கேள்வி கேட்பதில்லை.

No comments:

Post a Comment