Saturday, October 26, 2019

நீ ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாய்தான் இருக்கும்

•நீ ஊமையாக இருக்கும்வரை
உலகம் செவிடாய்தான் இருக்கும்
நாம் ஊமையாக இ.ருக்க மாட்டோம் என்று உலகின் காதுகளில் ஓங்கி ஒலித்துள்ளார்கள் தமிழ் இளையோர்கள்.
நேற்றைய தினம் லண்டன் பாராளாளுமன்றத்தின் முன் ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக லண்டனில் வாழும் தமிழ் சிறுவர்கள் நீதிகோரி நடத்திய போராட்டம் இது.
இந்த போராட்டம் வழக்கமான போராட்டங்களைவிட இரண்டு விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.
முதலாவது,
அடுத்த சந்ததியினரான இளையோர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
இரண்டாவது,
என்ன மொழியில் பேச வேண்டுமோ அந்த மொழியில் இவர்கள் பேச ஆரம்பித்துள்ளார்கள்.
இது தமிழ் மக்கள் மீண்டும் எழ ஆரம்பித்து விட்டார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது.
தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழ் மக்கள் போராட மாட்டார்கள் என்று நினைத்த இலங்கை இந்திய அரசுகளுக்கு இந்த சிறுவர்கள் தமது போராட்டத்தின் மூலம் தக்க பதில் அளித்துள்ளார்கள்.
குறிப்பு – மக்கள் மேற்கொள்ளும் எந்த போராட்டமும் தோல்வி அடைவதில்லை.

No comments:

Post a Comment