Thursday, October 31, 2019

•சுஜித் மரணம் கற்று தரும் பாடம் என்ன?

•சுஜித் மரணம்
கற்று தரும் பாடம் என்ன?
இரண்டு வயது சிறுவன் சுஜித் தன் மரணத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்வதற்கு ஒரு பாடத்தை தந்துவிட்டு சென்றுள்ளான்.
நாம் உண்ர்ச்சிவசப்பட்டு திட்டிக் கொண்டிருக்கிறேமேயொழிய உணர்வு பூர்வமாக சிந்திக்க தவறுகிறோம்.
அடுத்த பிரச்சனை வரும்வரை திட்டுவார்கள். அப்புறம் இதை மறந்துவிடுவார்கள் என அரசு நினைக்கிறது.
அதனால்தான் அரசும் இவை குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை.
முதலாவதாக,
தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 7 குழந்தைகள் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளது. ஆனால் அரசிடம் விழுந்த குழந்தையை மீட்க கருவி இல்லை. அது ஏன்?
இரண்டாவதாக,
கருவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆழ்துளைக்கிணறுகளை மூடவாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஏன் எடுக்கவில்லை?
மூன்றாவதாக,
ஆயிரம் அடிகளுக்கு மேலாக சென்று மீதேன் எடுக்க கருவி வைத்திருக்கும் அரசு வெறும் 60 அடியில் விழுந்திருந்த குழந்தையை எடுக்க கருவி இல்லை என்கிறது. அது ஏன்?
நான்காவதாக
சீனாவில் 100 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை வெறும் 5 மணி நேரத்தில் மீட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 66 ஆடி ஆழத்தில் விழுந்த குழந்தையை 70 மணி நேரத்தின் பின் பிணமாக மீட்கிறார்கள். அது ஏன்?
ஏனெனில்
மீதேன் எடுத்தால் கைநிறைய காசு வரும். குழந்தையை எடுத்தால் அதுவும் ஏழைக் குழந்தையை எடுத்தால் என்ன வரும் என்று அரசு நினைக்கிறது.
இதுவரை விழுந்தது எல்லாம் ஏழைக் குழைந்தைகளே. யாராவது ஒரு அரசியல்வாதியின் குழந்தையோ அல்லது காப்ரேட்கம்பனி முதலாளியின் குழந்தையோ விழுந்திருந்தால் நிச்சயம் தேவையான கருவிகளை அரசு வாங்கியிருக்கும்.
என்ன செய்வது?
பணம் வாங்கிவிட்டு ஓட்டுப்போடும் எமக்கு பணத்தை பாராமல் சேவை செய்யும் அரசு எப்படி கிடைக்கும்?
சுஜித் மரணம் அனைவருக்கும் கவலைதான். ஆனால் இதில் ஒரு மகிழ்சியான செய்தியும் அடங்கியிருக்கிறது.
இந்த சிறுவனுக்காக ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் மக்கள் பிரார்த்தனை செய்துள்ளனர் என்ற செய்தியே அது.
2009க்கு பின்னர் தமிழக தமிழ் மக்களும் ஈழத் தமிழ்மக்களும் ஒருவருக்கொருவர் குரல் கொடுக்கிறார்கள். ஒன்றிணைகிறார்கள் என்பதை காட்டும் செய்தி இது.
சிறுவனின் மரணம் இந்திய அரசுக்கு உறைக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழ் மக்கள் மக்கள் ஒன்றிணைகிறார்கள் என்ற செய்தி நிச்சயம் உறைக்கும்.

No comments:

Post a Comment