Saturday, October 26, 2019

செய்தி – சம்பந்தன் கூறும் கருத்தை இனியும் தமிழ் மக்கள் நம்பக் கூடாது – நாமல் ராஜபக்ச

•செய்தி – சம்பந்தன் கூறும் கருத்தை இனியும் தமிழ் மக்கள் நம்பக் கூடாது – நாமல் ராஜபக்ச
தம்பி நாமல் !
நான் எப்பவாவது சிங்கள மக்களிடம் வந்து மகிந்த ராஜபக்சாவை நம்பாதீர்கள் என்று கூறியிருக்கிறேனா? இல்லைத்தானே?
அப்படியிருக்க நீங்கள் ஏன் அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து என்னை நம்பவேண்டாம் என்று தமிழ் மக்களிடம் கூறுகிறீர்கள்?
இது என்ன நியாயம்? வாங்க தம்பி பேசுவம்.
நான்தானே உங்கள் அப்பாவின் தயவால்தான் இப்போது திருகோணமலை சென்று வர முடிகிறது என்று கூறினேன்.
அதுமட:;டுமன்றி இலங்கையின் தேசியதலைவர் உங்கள் அப்பா மகிந்தராஜபக்சா என்று கூறிய ஒரே தமிழன் நான்தானே. அதை மறந்துவிட்டீர்களா?
எல்லாவற்றுக்கும் மேலாக ஜ.நா வில் போர்க்குற்ற கூண்டில் இருந்து உங்கள் குடும்பத்தை காப்பாற்றியது நானும் என் தம்பி சுமந்திரனும்தானே.
ஆனால் நீங்களும் உங்கள் அப்பாவும் இதை எல்லாம் மறந்து என் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறித்தீர்கள். அப்பறம் சொகுசு பங்களாவையும் பறிக்க முயன்றீர்கள்.
ஆனாலும் நான் எதுவும் கூறாமல் பொறுமையாகத்தானே இருந்து வருகிறேன். நீங்கள் என்னடாவென்றால் யாழ்ப்பாணத்திற்கே சென்று என்னை நம்ப வேண்டாம் என்கிறீர்கள்.
இது என்ன நியாயம்? வயசான காலத்தில் பதவி பங்களா இல்லாமல் நான் எப்படி வாழ முடியும்?
கொஞ்சம் இரக்கம் காட்டும் தம்பி.
இப்படிக்கு
என்றும் உங்கள் குடும்பத்தின் விசுவாசி
சம்பந்தர் ஐயா.

No comments:

Post a Comment