Thursday, October 31, 2019

•பாவம். இவருக்கும் பசிக்கும்ல்லே!

•பாவம். இவருக்கும் பசிக்கும்ல்லே!
ஈழ புரட்சிகர விடுதலை முன்னணி என்றார்
ஆனால் ஈழத்தை கைவிட்டார்
விடுதலையைக் கைவிட்டார்
புரட்சியையும் கைவிட்டவிட்டார்
அதனால் மாகாணசபை முதல்வர் பதவி பெற்றார்
கடைசியில் தமிழீழத்தை பிரகடனம் செய்துவிட்டு இந்தியா சென்றார்
நீண்டகாலத்தின் பின் திரும்பி வந்தார்
சுயாட்சியைக்கூட இந்தியா தர முன்வரவில்லை என்ற உண்மையைக் கூறினார்
கடந்த தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு தூது விட்டுப் பார்த்தார்
அது சரிவரவில்லை என்றவுடன் இப்போது கோத்தபாயாவை ஆதரிக்க தொடங்கிவிட்டார்.
இவரை சிலர் “இடதுசாரித் தோழர்” என்கிறார்கள்
அப்படியென்றால் குறைந்தபட்டசம் ஜேவிபியையாவது இவர் ஆதரித்திருக்கலாமே? ஏன் முடியவில்லை?
எப்படியாவது யாரையாவது ஆதரித்து
எதாவது ஒரு பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
அதற்காக கோத்தபாயாவை ஆதரிக்க தொடங்கிவிட்டார்.
அதற்காக கோத்தாவின் கொலைகளை நியாயப்படுத்தவும் தொடங்கிவிட்டார்.
பாவம் அவருக்கும் பசிக்குமில்லே!

No comments:

Post a Comment