Thursday, October 31, 2019

இதோ எமக்கு இன்னொரு நண்பன் கிடைத்துவிட்டான்!

இதோ
எமக்கு இன்னொரு நண்பன் கிடைத்துவிட்டான்!
நாம் தனித்து விடப்பட்டவர்கள் இல்லை.
களத்தில் நாம் சோர்ந்துவிடத் தேவையில்லை
எமது இந்திய எதிரி தனிமைப்படுகிறான்
எமக்கான நண்பர்கள் அதிகரிக்கின்றார்கள்
லண்டனில் இந்திய அரசுக்கு எதிராக
முதலில் சீக்கிய மக்கள் திரண்டார்கள்
அடுத்து காஸ்மீர் மக்கள் திரண்டார்கள்
இப்போது மணிப்பூர் மக்கள் திரண்டுள்ளார்கள்.
இவர்கள் எல்லாம் இந்திய அரசை எதிர்த்து
தமது சுதந்திரத்திற்காக போராடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
மணிப்பூர் மக்களின் தொகை வெறும் 30 லட்சம்தான்.
ஆனால் அவர்கள் கொஞ்சம்கூட பயம் இன்றி இந்திய அரசை எதிர்க்க துணிந்தள்ளார்கள்.
ஏனெனில் சுதந்திரம் என்பது எண்ணிக்கையில் இல்லை. அது உணர்வில் உள்ளது.
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே
இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்றார் தோழர் தமிழரசன்
சீக்கிய, காஸ்மீரிய மற்றும் மணிப்பூர் மக்கள் தமது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவது
தமிழ் மக்களின் போராட்டத்திற்கு செய்யும் மிகப் பெரிய உதவியாகும்.
தமிழ் மக்களின் போராட்டம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல
இந்திய அரசால் அடக்கப்படும் தேசிய இனங்கள் யாவற்றுக்கும்
விடுதலையை பெற்றுக் கொடுக்கப் போகின்றது.
இந்தியா இரும்பு என்றால் அதை உருக்கி நொருக்கும் நெருப்பாக நாம் மாறுவோம்
இந்தியா வல்லரசு என்றால் அதை பீஸ் பீஸாக உடைத்து சிதறவைக்கப்போகும் வெடி குண்டு தமிழ் மக்களே.
எரிமலை வெடிக்கும்வரை அது பூமிக்குள் குமுறிக்கொண்டிருப்பது கண்ணுக்கு தெரிவதில்லை.
அதுபோலவே ரஸ்சிய சமூக ஏகாதிபத்தியம் உடைந்து நொருங்கும்வரை யாரும் அதைக் கணிக்கவில்லை.
குறித்து வைத்தக்கொள்ளுங்கள்.
வெகுவிரைவில் இந்து சமுத்திரத்தில் தமிழ் மக்கள் அற்புதம் நிகழ்த்தப் போகிறார்கள்.
தமிழ் மக்களின் போராட்டம் வரலாற்று அதிசயமாக மாறப் போகிறது.

No comments:

Post a Comment