Thursday, October 31, 2019

இந்திய அரசு இவர்களை சாகடிக்கலாம்

இந்திய அரசு இவர்களை சாகடிக்கலாம் - ஆனால்
இவர்களுடைய போராட்டத்தை தோற்கடிக்க முடியாது!
இவர்கள் “நக்சல்பாரிகள். தேச பக்தர்கள்” என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது.
இவர்கள் “வர்க்கப்போராளிகள்” என்று உண்மையான கம்யுனிஸ்டுகள் கூறுகின்றார்கள்.
ஆனால் இவர்கள் “பயங்கரவாதிகள்” என்று கேரள போலிக்கம்யுனிஸ்ட் அரசு சுட்டுக் கொல்கின்றது.
ஒருபுறத்தில் தமிழ் மக்கள் எல்லாம் சிறுவன் சுஜித் மரணத்தில் மூழ்கியிருக்க மறுபுறத்தில் கேரள அரசு இரண்டு தமிழர்களை போலி மோதலில் சுட்டுக் கொன்றுள்ளது.
கடந்த வருடமும் இதேபோன்று இரண்டு தமிழர்களை கேரள அரசு போலி மோதலில் சுட்டுக் கொன்றது.
இவர்கள் மக்களுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்து போராடுபவர்கள். அதனால்தான் இந்திய அரசு ஈவு இரக்கம் இன்றி இவர்களை சுட்டுக் கொல்கின்றது.
ஒருபறத்தில் ஊழல் பேர்வழி சிதம்பரத்தை எய்ம்ஸ் மருத்துவ சிகிச்சை வழங்கி பாதுகாத்து வரும் இந்திய அரசு மறுபுறத்தில் மக்களுக்காக உண்மையாக போராடுபவர்களை சுட்டுக் கொல்கின்றது.
இந்திய அரசு இவர்களை சாகடிக்கலாம். ஆனால் இவர்கள் நடத்தும் போராட்டத்தை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.
குறிப்பு- இந்த மாவோயிஸ்டுகள் ஈழத் தமிழர் போராட்டத்தை உறுதியாக ஆதரிக்கின்றார்கள். எனவே அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது ஈழத் தமிழர்களாகிய எமது கடமையாகும்.

No comments:

Post a Comment