Saturday, October 26, 2019

நான்காவது நாளாக தொடரும் ஈழ அகதிகளின் உண்ணாவிரதம்!

•நான்காவது நாளாக தொடரும்
ஈழ அகதிகளின் உண்ணாவிரதம்!
திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் நான்காவது நாளாக தமது உண்ணாவிரத்தை தொடருகின்றனர்.
இந்தியா தன்னை காந்தி தேசம் என்று பெருமை கொள்கிறது. ஆனால் அங்கே நான்காவது நாளாக அகதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஏன் என்று ஒரு அதிகாரி இதுவரை சென்று கேட்கவில்லை. இதுதானா உண்ணாவிரதத்திற்கு காந்திதேசம் அளிக்கும் மதிப்பு?
பெயர் தமிழ்நாடு. முதலமைச்சர்கூட தன்னை தமிழர் என்கிறார். துணை முதல்வர்கூட தமிழர்தான். ஆனால் அங்கே ஈழ தமிழ் அகதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அதை ஏன் என்று கேட்க இந்த தமிழர்கள் அக்கறை கொள்ளவில்லை.
7 தமிழர் விடுதலையை சீமான் பேசிக் குழப்பிப்போட்டார் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருப்பவர்கள் இந்த சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலை மறுக்கப்படுவதற்கு என்ன காரணம் என்று கூறுவார்களா?

No comments:

Post a Comment