Thursday, October 31, 2019

உலக மகா சாணக்கியம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது!

•உலக மகா சாணக்கியம்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது!
இன்று தபால் மூல வாக்களிப்பு. ஆனால் இதுவரை தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சம்பந்தர் ஐயா கூறவில்லை.
போற போக்கைப் பார்த்தால் தேர்தல் முடிந்த பிறகுதான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர் கூறுவார் போல் இருக்கு.
இவ்வாறு அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைத்தான் “சம்பந்தரின் சாணக்கியம்” என்று சிலர் பகழ்ந்து எழுதுகிறார்கள். என்னே கொடுமை இது?
அமைச்சர் மனோ கணேசன் சஜித் பிரேமதாசாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை விபரத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளார்.
இதன் அடிப்படையில் தமது ஆதரவு சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கப்படுகிறநது என்பதையும் தன் மக்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கைகளை எந்தளவு சஜித் பிரேமதாசாத நிறைவேற்றுவார் என்பது சந்தேகத்திற்கு உரியதாயினும் குறைந்தபட்சம் அவர் தமது நடவடிக்கைகளை தம் மக்களுக்கு நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார்.
மனோகணேசனின் இந்த நேர்மையைக்கூட எமது தலைவர் சம்பந்தர் ஐயாவினால் தமிழ் மக்களிடம் வெளிப்படுத்த முடியாமல் இருப்பது வெட்கக்கேடானது.

No comments:

Post a Comment