Saturday, October 26, 2019

மூக்கணாங்கயிற்றை மாற்றுவதால் மாடுகளுக்கு பயன் இல்லை

•மூக்கணாங்கயிற்றை மாற்றுவதால் மாடுகளுக்கு பயன் இல்லை
ஜனாதிபதியை மாற்றுவதால் தமிழர்களுக்கு விடிவு இல்லை
மகிந்தவை மாற்றி மைத்திரி வந்தார். தமிழருக்கு எந்தப் பயனும் இல்லை.
இனி அடுத்து மைத்திரியை மாற்றி கோத்தாவோ அல்லது சஜித்தோ வரலாம்.
யார் வந்தாலும் தமிழர் வாழ்வில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.
தமிழர் “அடிமை” என்ற நிலையும் மாறப் போவதில்லை.
அப்படியென்றால் தமிழர் என்ன செய்ய வேண்டும்?
சிலர் கோத்தா வரக்கூடாது என்பதற்காக சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்கிறார்கள்.
இன்னும் சிலர் கோத்தா வந்தாலும் சஜித் வந்தாலும் தமிழ் மக்களுக்கு ஒன்றுதான். எனவே தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆனால் இந்த தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்பதில் இரு பிரிவினர் இருக்கின்றனர்.
ஒன்று- தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்கள் எந்த தீர்வையும் பெற முடியாது என்று உணர்ந்து தேர்தல் பாதையை பகிஸ்கரிப்பவர்கள்.
இரண்டு – ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கும் அதே நேரத்தில் பாராளுமன்றதேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்களில் பங்குபற்றுபவர்கள்.
இந்த இரண்டாவது பிரிவினர் பாராளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ் மக்கள் ஏன் பங்குபற்ற வேண்டும்? அல்லது பங்குபற்றுவதன்மூலம் எப்படி தீர்வினை பெற முடியும்? என்பதை விளக்க வேண்டும்.

No comments:

Post a Comment