Saturday, October 26, 2019

பொதுபலசேனா பிக்கு ஞான தேரர்! ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?

பொதுபலசேனா பிக்கு ஞான தேரர்!
ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?
நீதிமன்ற உத்தரவை மீறி சட்டத்;தையும் நீதிமன்றத்தையும் அவமதித்த பிக்கு ஞானதேரர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் ஏடுக்கப்படவில்லை.
இதனால் அவர் தைரியமாக உலாவி வருவதுடன் மீண்டும் தமிழ் மக்களை மிரட்டுகிறார். முள்ளிவாய்க்காலில் தந்த அழிவை மறக்க வேண்டாம் என்று மிரட்டுகிறார்.
இது இரண்டு மதங்களுக்கிடையேயான பிரச்சனை அல்ல. இது ஒரு பிக்கு மீதான பிரச்சனையும் இல்லை. இது தமிழ் மக்களின் நிலங்கள் மீதான உரிமைப் பிரச்சனை.
தமிழ் மக்கள் தங்கள் நிலங்கள் மீதான உரிமையை ஒருபோதும் விட்டுத் தர முடியாது.
எம் நிலத்திற்கான இந்த போராட்டத்தில் ஒன்றில் நாம் வென்றாக வேண்டும். அல்லது கொல்லப்படுவோம். ஏனெனில் நாம் தப்பி ஓடுவதற்கு நமக்கு இடமில்லை.
ஆனால் ஞான தேரர் மிரட்டுகிறாரே, என்ன செய்வது என்று சிலர் நினைக்கலாம். அவர்களுக்காக சில வரிகள்.
ஒரு கல்லை எடுத்து நாய்க்கு வீசினால் அது பயந்து ஓடிவிடும். ஆனால் அதே கல்லை ஒரு தேன்கூட்டை நோக்கி எறிந்தால் நாம் பயந்து ஓட வேண்டி வரும்.
நாயை விட பலம் குறைந்த தேனிக்கு பயந்து நாம் ஓட என்ன காரணம்? ஏனெனில் தேனீக்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எம்மை எதிர்க்கின்றன.
அதுபோல் ஞான தேரர் எம்மை நாய் என்று நினைத்து கல் எறிகிறார். ஆனால் நாங்கள் தேனீக்கள் போல் ஒற்றுமையாக இருந்தால் ஞான தேரர் திரும்பி ஓடுவார்.

No comments:

Post a Comment