Saturday, October 26, 2019

உலகின் மிகப் பெரிய கொடுங்கோலன்

உலகின் மிகப் பெரிய கொடுங்கோலன் என்று அழைக்கப்பட்ட ஹிட்லர்கூட மருத்துவமனைகளின் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தியது இல்லை.
ஆனால் அமைதிப்படை என்று வந்து ராஜீவ் காந்தியின் இந்திய ராணுவம் யாழ் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி நோயாளிகள், மருத்துவர்கள், தாதிகள் என்று பலரை கொன்றார்கள்.
புலிகள் தாக்கினார்கள். அதனால் திருப்பி தாக்கினோம் என்கிறார்கள். அப்படியென்றால் புலிகளை அல்லவா தாக்கியிருக்க வேண்டும்.
ஆனால் இந்திய ராணுவத்தின் முதல் குண்டு பத்திரிகை அலுவலகத்தின் மீதுதானே பாய்ந்தது.
அதுவும் துப்பாக்கி குண்டு அல்ல. பீரங்கி குண்டல்லவா போட்டார்கள். அமைதிப்படை என்று வந்தவர்கள் எதற்கு பீரங்கி டாங்கிகளுடன் வந்தார்கள்?
அப்படியென்றால் வரும்போதே தமிழ் மக்களை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று திட்டத்துடன்தானே வந்திருக்கிறார்கள்.
இப்போதும்கூட ராஜிவ் கொன்ற எட்டாயிரம் தமிழர்களின் உடலில் மயிர்தான் இருந்தது போலவும் ராஜீவ்காந்தி உடலில் மட்டும்தான் உயிர் இருந்தது போலவும் அல்லவா பேசுகிறார்கள்.
என்னே கொடுமை இது?
தமிழனின் இந் இழிநிலை எப்போது மாறும்?

No comments:

Post a Comment