Tuesday, May 30, 2017

•100வது நாள்! காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம்.!!

•100வது நாள்!
காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம்.!!
இவர்கள் வீடு கேட்டிருந்தால் அமைச்சர்மனோகணேசன் பிரதமர் மோடியிடம் வாங்கிக் கொடுத்திருப்பார்.
இவர்கள் கோயில் கட்ட நிதி கேட்டிருந்தால் சம்பந்தர் அய்யா அரசிடம் வாங்கிக் கொடுத்திருப்பார்.
இவர்கள் ஊருக்கு உதவி கேட்டிருந்தால் முதலமைச்ர் விக்கி அமெரிக்க நியூயோர்க சிற்றியுடன் ஒப்பந்தம் போட்டிருப்பார்.
இவர்கள் பாடசாலைக்கு உதவி கேட்டிருந்தால் லண்டனில் உள்ள பழைய மாணவர்கள் சுப்பர் சிங்கர் பாடகர்களை வரவழைத்து கச்சேரி நடத்தியிருப்பார்கள்.
இவர்கள் எல்லோரும் இறந்திருந்தால் தாயகத்திலும் புலத்திலும் போட்டி போட்டு அஞ்சலி நிகழ்வு செய்திருப்பார்கள்.
ஆனால் இவர்கள் 100 நாட்களாக உயிருடன் இருந்து போராடி வருவது காணாமல் போன தமது உறவுகளை தேடியல்லவா!
அதனால்தான் யாருமே இவர்களுக்கு உதவ முன்வரவில்லை.
பாவம் இவர்கள்!

No comments:

Post a Comment