Tuesday, May 30, 2017

• “நல்ல காலம் வருகுது. ஈழத் தமிழருக்கு இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல காலம் பிறக்குது” ஈழத்து குடுகுடுப்பைக்காரர் சம்பந்தர் அய்யா!

• “நல்ல காலம் வருகுது. ஈழத் தமிழருக்கு இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல காலம் பிறக்குது” ஈழத்து குடுகுடுப்பைக்காரர் சம்பந்தர் அய்யா!
தமிழ்நாட்டில் அதிகாலையில் வீட்டு வாசலில் வந்து “நல்ல காலம் பிறக்கப் போகுது. இந்த வீட்டுக்காருக்கு இன்னும் ஒரு வாரத்தில் நல்ல செய்தி கிடைக்கப்போகிறது “ என்று சொல்லி பிழைப்பு நடத்துவோரை குடுகுடுப்பைக்காரர் என்று அழைப்பது வழக்கம்.
அதுபோல் ஈழத்தில் தமிழ் அரசியலில் ஒருவர் “இன்னும் ஒரு வருடத்தில் தமிழருக்கு தீர்வு கிடைக்கப்போகுது” என்றார். பின்னர் இப்போது “ இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல செய்தி தமிழருக்கு கிடைக்கப்போகுது” என்கிறார்.
அந்த தமிழ் அரசியல் குடுகுடுப்பைக்காரர் பெயர் சம்பந்தர் அய்யா. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மட்டுமன்றி பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் கூட.
குடுகுடுப்பைக்காரர் சொன்ன நல்ல செய்தி ஏன் நடக்கவில்லை என்று அவரிடம் கேட்க முடியாதோ அதேபோன்று ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்று அரசியல் குடுகுடுப்பைக்காரர் சம்பந்தர் அய்யாவிடமும் கேட்க முடியாது.
நல்ல செய்தி வரும் என்று குடுகுடுப்பைக்காரர் சொன்ன வீட்டில் சில வேளை செத்த வீடு நடப்பதுண்டு. அதேபோன்று இரண்டு வாரத்தில் நல்ல செய்தி வரும் என்றார் சம்பந்தர் அய்யா. ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அலோசனை எதுவுமின்றி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜந்து நாட்களுள் செய்தி வந்துள்ளது.
யுத்தம் முடிந்து எட்டு வருடமாகிவிட்டது. இன்னமும் காணாமல் போனோர் பிரச்சனை தீரவில்லை. மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இவை குறித்து கேட்டபோது இன்னும் ஒரு வருடத்தில் தீர்வு வரப் போகுது என்றார் சம்பந்தர் அய்யா. ஆனால் தீர்வு எதுவும் வரவில்லை.
அதேவேளை அவருக்கு இரண்டு சொகுசு பங்களா, 5 கோடி ரூபாவில் சொகுசு வாகனம், 36 கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பிற்கு, அவருக்கு சேவை செய்ய 60 ஆதிகாரிகள் மற்றும் சேவகர்கள் என பல வசதிகள் கிடைத்துள்ளன.
இப்போது,
68 நாட்களாக வடமாகாண பட்டதாரிகளின் போராட்டம் நடக்கிறது.
5 வது நாளாக இரணைதீவு மக்களின் போராட்டம் தொடருகிறது.
45வது நாளாக பன்னங்கட்டி மக்களின் போராட்டம் தொடருகிறது.
75வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த தமிழ் மக்களின் போராட்டங்கள் பற்றி சம்பந்தர் அய்யா வாய் திறப்பதில்லை. ஆனால் இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல செய்தி வரும் என மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்.
இரண்டு வாரத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு வரவில்லையாயின் யாராவது பிளீஸ் சம்பந்தர் அய்யாவை அப்பலோ மருத்துமனையில் சேர்த்துவிடுங்கள்.
அவர் மரணமடைந்தார் என்ற தமிழ் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாவது வந்து சேரட்டும்!

No comments:

Post a Comment