Tuesday, May 30, 2017

•கம்யுனிஸ்ட் கட்சி தோழர்கள் இப்ப என்ன சொல்லப் போகிறார்கள்?

•கம்யுனிஸ்ட் கட்சி தோழர்கள் இப்ப என்ன சொல்லப் போகிறார்கள்?
கேரளாவில் தன்னை பாலியல் வல்லுறவு செய்த சாமியாரின் ஆண் உறுப்பை வெட்டி எறிந்துள்ளார் ஒரு மாணவி.
இதனை அறிந்த கேரள முதலமைச்சர் அந்த மாணவியை பாராட்டியுள்ளார். இந்த கேரள முதலமைச்சர் மாக்ஸ்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்.
சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் இப்படி ஒரு செயலை வெளிப்படையாக பாராட்டலாமா என விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் அதையிட்டு கவலைப்டாமல் அவர் மாணவியை பாராட்டியுள்ளார்.
உண்மையில் முதலமைச்சரின் உணர்வுகளை; பாராட்டப்பட வேண்டியதுதான். அதேவேளை எமக்கு ஒரு கேள்வி எழுகிறது.
எமது கேள்வி என்னவென்றால், தன்னை பாலியல் வல்லுறவு செய்த சாமியாரின் ஆண் உறுப்பை மாணவி வெட்டியது சரி என்றால் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களின் பாலியல் வல்லுறவுக்கு காரணமான ராஜீவ் காந்தியை தனு கொன்றது எப்படி தவறாகும்?
கம்யுனிட்கட்சி தோழர்களே இப்ப என்ன சொல்லப் போகிறீர்கள்?
அது முதலமைச்சரின் தனிப்பட்ட கருத்து என்று வழக்கம்போல் சொல்லப் போகிறீர்களா?
அல்லது
தனு ராஜீவைக் கொன்றது சரிதான் என்று ஒத்துக்கொள்ளப் போகிறீர்களா?
பிளீஸ!; எதுவாயினும் கொஞ்சம் சீக்கிரம் முடிவெடுங்க.
ஏனென்றால்
கேரளமாணவிக்கு ஒரு நியாயம்
தனுவுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான்கம்யுனிஸ்ட் கட்சி நியாயம்
என்ற பழி வரப்போகுது.

No comments:

Post a Comment