Tuesday, May 30, 2017

•புத்தர்! இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்?

•புத்தர்!
இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்?
கடந்த ஓராண்டில் மட்டும் காஸ்மீரில் இந்திய ராணுவத்தால்
கொல்லப்பட்டவர்கள்- 157 பேர்
படுகாயமடைந்தவர்கள்- 17650 பேர்
கண் பார்வையிழந்தவர்கள் - 825 பேர்
கண்ணில் காயமடைந்தோர்- 1860 பேர்
கைது செய்யப்பட்டோர் - 11000 பேர்
வீடுகளின் மீது தாக்குதல்- 74000
வீடு தீவைப்பு – 83
இவ்வாறு தனது ராணுவத்தின் மூலம் தனது சொந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திவரும் பிரதமர் மோடி புத்தரின் ஜெயந்தி தினத்தை கொண்டாட சிறப்பு விருந்தினராக இலங்கை வருகிறார்.
இலங்கையில் தனது ராணுவத்தின் மூலம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்த இலங்கை அரசானது ஒருபுறம் யுத்த வெற்றி விழாக்களை நடத்திக் கொண்டு மறுபுறம் புத்தரின் ஜெயந்தி தினத்தைக் கொண்டாடுகிறது.
இப்போது,
72 நாட்களாக வடமாகாண பட்டதாரிகளின் போராட்டம் நடக்கிறது.
9 வது நாளாக இரணைதீவு மக்களின் போராட்டம் தொடருகிறது.
49வது நாளாக பன்னங்கட்டி மக்களின் போராட்டம் தொடருகிறது.
79வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த மக்கள் போராட்டங்கள் குறித்து இலங்கை அரசு எந்த இரக்கமும் கொள்ளவில்லை. ஆனால் இலங்கை அரசு பெரும் பணம் செலவு செய்து புத்தருக்கு விழா எடுக்கிறது.
புத்தர் அன்பை போதித்தவர். புத்தர் பிற உயிர்களை நேசிக்கும்படி கோரியவர். ஆனால் மனிதர்களை கொன்று குவித்தவர்கள் புத்தருக்கு விழா எடுக்கும் அவலம் நடக்கிறது.
இதையிட்டு புத்தர் ரத்தக் கண்ணீர் வடிக்காமல் என்ன செய்வார்?

No comments:

Post a Comment