Tuesday, May 30, 2017

•மன்னித்துவிடுங்கள் திருமுருகன் காந்தி !

•மன்னித்துவிடுங்கள் திருமுருகன் காந்தி !
நீங்கள் மாண்டு போன எமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த முயன்றபோது நாங்கள் “கலைஅரசி” விழா நடத்திக்கொண்டிருந்தோம்.
நீங்கள் எமக்காக பொலிசில் அடிவாங்கி சிறைபட்டபோது நாங்கள் அனுராதா சிறீராம் பாட்டு கேட்டு ரசித்துக்கொண்டிருந்தோம்.
நீங்கள் எமக்காக ஜ.நா வந்து நீதி கேட்டபோது நாங்கள் கெலிகப்டரில் மகளுக்கு சாமத்தியவீடு நடத்திக்கொண்டிருந்தோம்.
நீங்கள் இறந்துபோன எமது உறவுகளை நினைவு கூர்ந்து கொண்டிருக்கும்போது நாங்கள் இறந்துபோன எங்கள் நாய்க்கு செத்தவீடு நடத்திக்கொண்டிருந்தோம்.
நீங்கள் சிறையில் இருந்து மீண்டு வந்ததும் தொடர்ந்தும் எமக்காக குரல் கொடுப்பீர்கள் என்று தெரியும்.
ஆனால் நாங்கள் அடுத்து சுப்பர் சிங்கர் பாடகர்களை அழைத்து யூன் 24ம் திகதி “நாதவினோதம்” நடத்தப் போகிறோம்.
மன்னித்துவிடுங்கள் திருமுருகன் காந்தி !
இப்படிக்கு
லண்டன் வாழ் ஈழத் தமிழன்.

No comments:

Post a Comment