Tuesday, May 30, 2017

•“டெலோ” தலைவர் சிறீயண்ணா நினைவு கூரப்பட வேண்டுமா?

•“டெலோ” தலைவர் சிறீயண்ணா நினைவு கூரப்பட வேண்டுமா?
சிறீயண்ணா முன்வைத்த தமிழீழத்தை கைவிட்டவர்கள்
சிறீயண்ணா முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள்
பல வருடங்களின் பின் இப்போது சிறீயண்ணாவுக்கு ஏன் அஞ்சலி செலுத்துகிறார்கள்?
தமிழீழத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் கைவிட்டவர்கள் இன்னும் எதற்காக “தமிழீழ விடுதலை இயக்கம்” என்னும் பெயரில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்?
சிறீயண்ணாவுக்கு அஞ்சலி என்னும் பெயரில் சில இந்திய விசுவாசிகள் மீண்டும் 1983ம் ஆண்டு நிலைக்கு தமிழ் மக்களை கொண்டு செல்ல கனவு காண்கின்றனர். ஆனால் அவர்கள் எப்படித்தான் கனவு கண்டாலும் அல்லது தலை கீழாக நின்றாலும் இனி இந்தியாவை ஈழத் தமிழர்கள் நம்பப் போவதில்லை.
1984ல் பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் இயக்கம் யாழ்ப்பாணத்தில் இரு வெள்ளையினத்தவர்களை கடத்தினார்கள். சிறையில் இருக்கும் தமது தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா கைதிகளை விடுதலை செய்து அந்த வெள்ளைக்காரர்களை காப்பாற்ற முன்வந்தார்.
ஆனால் அப்போதைய இந்திய பிரதமரான இந்திராகாந்தி உடனே சென்னையில் இருந்த பத்மநாபா மற்றும் முன்னனி தலைவர்களை இரகசியமாக கைது செய்து ஒரு ஓட்டலில் வைத்து உதைத்து அந்த வெள்ளைக்காரர்களை விடுதலை செய்ய வைத்தார். இது அப்போது அனைவரும் அறிந்த செய்தி.
இந்கு எனது கேள்வி என்னவெனில் யாரே இரு வெள்ளைக்காரர்களுக்காக நடவடிக்கை எடுத்த இந்திய அரசு தனது விசுவாசியான சிறீயண்ணாவை ஏன் காப்பாற்ற முயலவில்லை? அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில்தானே இருந்தார். அவரை கைது செய்து மிரட்டியிருந்தால் சிறீயண்ணாவையும் அவரது போராளிகளையும் காப்பாற்றியிருக்கலாம்தானே?
அதுமட்டுமல்ல, டெலோ இயக்கத்திற்கு பின்பு புலிகள் இந்திய விசுவாச இயக்கங்களான ஈபிஅர்எல்எவ் மற்றும் ஈரோஸ் இயக்கங்களை தடை செய்தபோதும் இந்திய அரசு மௌனமாகத்தானே இருந்தது? ஏன் அதை தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல சம்பிரதாயத்திற்காகக்கூட ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே?
உண்மையில் இந்திய அரசு தனது உளவுப்படை மூலம் இயக்கங்களுக்கிடையே மோதல்களை உருவாக்கியது. இயக்கங்கள் ஒன்றுக்கொன்று மோதி அழிய வேண்டும் என்று விரும்பியது. அதற்கான வேலைகளையே அது செய்தது.
எனவே சிறீயண்ணா இருந்திருந்தால் இந்திய அரசு உதவியிருக்கும் என்பதும் அவர் கொல்லப்படாமல் இருந்திருந்தால் தமிழீழம் கிடைக்க இந்திய அரசு உதவியிருக்கும் என்பதும் தற்போது இந்திய அரசைக் காப்பாற்ற முயலும் சில விசுவாசிகளின் தவறான கதைகள் ஆகும்.
புழு கூட மிதிபடும்போது துடித்து எழும். ஆனால் இத்தனை அழிவுக்கும் பிறகும் இந்த அழிவுகளுக்கு காரணமான இந்திய அரசை நியாயப்படுத்த முயலும் இந்திய விசுவாசிகள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.
கடந்த வருடம் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தற்போதைய டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அக் கேள்விக்கு செல்வம் அடைக்கலநாதன் இதுவரை பதில் அளிக்கவில்லை.
முன்னாள் தமிழர்விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோர் கொல்லப்பட்டதற்கான காரணம் என்னவென்று கேட்டுள்ளார்.
இவர்கள் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்ற காரணத்தை தற்போதைய டெலோ தலைவர் செல்வம் கூறுமாறு சிறீதரன் கேட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல 30 வருடம் நாட்டைவிட்டு ஓடியவர்கள் இப்போது எதற்காக வந்து புலிகளால் சுடப்பட்டவர்களுக்கு விழா எடுக்கிறார்கள் என்றும் அவர் கேட்டுள்ளார்?
அத்தோடு இவற்றின் பின்னால் மறைந்திருக்கும் கரம் எது வென்றும் அது விரைவில் அம்பலத்திற்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
மீண்டும் இந்திய உளவுப்படையின் பின்னனியில் டெலோ அமைப்பு செயற்பட முனைவதாகவே அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சிறீதரன் எழுப்பியுள்ள கேள்விகள். நியாயமானவை. இதற்கு செல்வம் அடைக்கலநாதன் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.
கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது டெலோ தலைவர் குட்டிமணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர் என்று எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டியிருந்தார்.
உடனே அப்போது டெலோ தலைவராக இருந்த சிறீயண்ணா கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க “ குட்டிமணி அப்போது இயக்க போராளியாக இருக்கவில்லை. அவர் கடத்தல் காரராகவே இருந்தார். அதனால்தான் கருணாநிதி கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்” என அறிக்கை விட்டார்.
கருணாநிதியின் அரசியலுக்காக தமது தலைவரை கடத்தல்;காரன் என்று கூறிய கெட்டித்தனத்திற்காகவா சிறீயண்ணா நினைவு கூரப்பட வேண்டும் நண்பர்களே?

No comments:

Post a Comment