Tuesday, May 30, 2017

அவங்களே வைப்பாங்க அவங்களே எடுப்பாங்க

அவங்களே வைப்பாங்க அவங்களே எடுப்பாங்க என்பது போல
அவங்களே சுடுவாங்க அப்புறம் அவங்களே தேடுவாங்க
இதுதானா நல்லாட்சி அரசின் நல்லிணக்க நடவடிக்கை?
கேப்பாப்புலவில் மக்கள் போராடிய போது சுமந்திரன் உயிருக்கு ஆபத்து என்று நாடகம் அரங்கேற்றி பதில் தரப்பட்டது.
தற்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் நடைபெறுகிறது. அதற்கு முகமாலையில் பொலிசார் மீது துப்பாக்கி சூடு என்று பதில் தரப்பட்டுள்ளது.
இதற்கு எத்தனை இளைஞர்கள் கைது செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.
சில இனவாதப் பிக்குகள் அமைச்சர் மனோ கணேசன் அலுவலத்திற்கு சென்று நேரிடையாக மிரட்டி விட்டு சென்றுள்ளார்கள்.
அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அரசு தரப்பில் ஒருவர்கூட இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
இன்னும் சிலர் காலியில் இருந்து வந்து கிளிநொச்சியில் தனி சிங்கள கொடி ஏற்றுகிறார்கள். அவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் இறந்த தமிழர்களை நினைவு கூர்வது ராணுவத்தின் மனங்களை நோகடிக்குமாம். எனவே கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.;
தெரியாமல்தான் கேட்கிறேன், தமிழ் மக்கள் என்ன அடிமைகளா?

No comments:

Post a Comment