Tuesday, May 30, 2017

•"நல்ல செய்தி" கிடைக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே!

•"நல்ல செய்தி" கிடைக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே!
இங்கு சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் ஜனாதிபதி மைத்திரியுடன் உரையாடுவது இரு வாரங்களில் கிடைக்க விருக்கும் நல்ல செய்தி பற்றியே என நம்புவோமாக.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்று சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்திருந்தார்.
தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்ததோ இல்லையோ ஆனால் சம்பந்தர் அய்யாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது. 6 சொகுசு வாகனங்கள் கிடைத்தது. இரண்டு சொகுசு பங்களாக்கள் கிடைத்தது. 20 பாதுகாப்பு வீரர்கள் கிடைத்தது. சுமந்திரனுக்கும்கூட அதிரடிப் படையின் பாதுகாப்பு கிடைத்துள்ளது.
இப்போது இரு வாரங்களில் நல்ல செய்தி கிடைக்கும் என மே தினத்தில் சம்பந்தர் அய்யா கூறினார். அதன்படி நல்ல செய்தி கிடைக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது.
இங்கு சம்பந்தர் அய்யா நல்ல செய்தி என்று கூறியது தமிழ் மக்களின் தீர்வு என நாம் நம்புகிறோம். ஆனால் அவர் ஒருவேளை தனக்கு ஏதும் சலுகை கிடைக்கப் போவதை கூறினாரோ தெரியவில்லை.
ஒரு வருடத்தில் ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்று கேட்டபோது அது தனது கணிப்பு மட்டுமே என சர்வ சாதாரணமாக பதில் கூறினார் சம்பந்தர் அய்யா. தமிழ் மக்களை தான் ஏமாற்றியது குறித்து கொஞ்சம்கூட அவர் கூச்சப்படவில்லை.
எனவே அடுத்து 4 நாட்களின் பின் ஏன் நல்ல செய்தி கிடைக்கவில்லை என்று யாராவது கேட்டால் சர்வசாதாரணமாக எதையாவது கூறுவார்.
சம்பந்தர் அய்யா போன்றதொரு கேவலம் கெட்ட தலைவரை தமிழ் இனம் இதுவரை சந்தித்ததில்லை என்றே வரலாறு எழுதப்படப் போகிறது.

No comments:

Post a Comment